ஸ்டோய்னிஸ் அதிரடியால் லக்னோ அணி அபார வெற்றி ! மும்பையின் ப்ளே ஆஃப் கனவு கேள்வி குறி !

Published by
அகில் R

IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோவில் உள்ள அட்டல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் மோதினர். இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் பேட்டிங் செய்ய மும்பை அணி களமிறங்கியது. மும்பை அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மாவின் பிறந்தாளான இன்று சிறப்பாக விளையாடுவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவர் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். அவர் மட்டும் இல்லாமல் அவரைத் தொடர்ந்து களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க மும்பை அணி 27 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பிறகு இஷான் கிஷனும், நேகல் வதேராவும் மும்பை அணிக்கு தூணாக நின்று பொறுமையுடன் அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள்.

அவர்களை தொடர்ந்து டிம் டேவீட்டின் 18 பந்துக்கு 35 ரன்கள் என்ற ஒரு அதிரடி கேமியோவால் மும்பை அணி 20 ஓவருக்கு 7 விக்கெட்டை இழந்து144 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக வதேரா 46 ரன்கள் சேர்த்தார். அதே போல் லக்னோ அணியில் அதிகபட்சமாக மோசின் கான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும், 145 என்ற எளிய இலக்கை துரத்துவதற்கு லக்னோ அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.

முதல் ஓவரில் தொடக்க வீரரான அர்ஷின் குல்கர்னி முதல் பந்திலேயே ரன்ஸ் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். அதன் பிறகு கே.எல்.ராகுலும், மார்க்க ஸ்டோய்னிஸ்ஸும் அதிரடியாக விளையாட தொடங்கினர். அனால் துரதிஷ்டவசமாக கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியாவின் பந்து வீச்சில் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்து  வெளியேறினார். அதன் பின் ஸ்டோய்னிஸ் மற்றும் தீபக் ஹூடா கூட்டணி அமைத்து விளையாடினார்கள்.

ஆனால், அதிரடியாக விளையாடிய ஸ்டோய்னிஸ் அரை சதம் கடந்தார், சிறப்பாக விளையாடிய அவர் 45 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின் நிக்கோலஸ் பூரனும், ஆஷ்டன் டர்னரும் பொறுமையாக விளையாடும் போடும் பொழுது டர்னரும், ஆயுஷ் பதோனியும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து ஆட்டத்தின் போக்கை விறுவிறுப்பாக மாற்றினார்கள்.

இறுதியில் நிக்கோலஸ் பூரனின் சிறப்பான விளையாட்டால் லக்னோ அணி கடைசி ஓவரில் வெற்றியை ருசித்தது. இதனால் 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்களை  எடுத்து வெற்றி பெற்றது. இதனால் 4 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணி த்ரில் வெற்றியை ருசித்தது.

இந்த வெற்றியின் மூலம் லக்னோ அணி புள்ளிபட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. மேலும், இந்த தோல்வியின் மூலம் மும்பை அணியின் ப்ளே ஆஃப் கனவு கேள்வி குறி ஆகியுள்ளது.

Published by
அகில் R

Recent Posts

நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்காதது ஏன்? மனம் திறந்த கெவின் பீட்டர்சன்!

டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…

49 minutes ago

“நாம் நமக்குள் சண்டையிடாமல் ஒற்றுமையாக இருப்போம்!” அஜித்குமார் வேண்டுகோள்!

டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய…

1 hour ago

கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!

ஒட்டாவா : 343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அமெரிக்காவை போலவே கனடாவிலும் தேர்தல் வாக்கெடுப்பு…

2 hours ago

2026ல் அதிமுகவுக்கு 6 இடங்கள் கூட கிடைக்காது -ஆர்.எஸ்.பாரதி காட்டம்!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது…

2 hours ago

சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!

லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District)…

2 hours ago

பஹல்காம் தாக்குதல் : உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.50 லட்சம்…மஹாராஷ்டிரா முதல்வர் அறிவிப்பு!

காஷ்மீர் : மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…

2 hours ago