ஐபிஎல் 2024: பெங்களூரு அணியை வீழ்த்தி லக்னோ 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!

Published by
murugan

ஐபிஎல் 2024:  இன்றைய போட்டியில் 182 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 153 ரன்கள் எடுத்தனர்.

இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூரு மற்றும் லக்னோ அணிகள் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோதினர். இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 5 விக்கெட்டை இழந்து 181 ரன்கள் எடுத்தனர்.

இந்த போட்டியில் தொடக்க வீரரான குயின்டன் டி காக் அதிகபட்சமாக 56 பந்தில் 8 பவுண்டரி, 5 சிக்ஸர் உட்பட மொத்தம் 81 ரன்கள் குவித்தார். மத்தியில் இறங்கிய நிக்கோலஸ் பூரன் 21 பந்தில் 5 சிக்ஸர் மற்றும் 1 பவுண்டரி உட்பட  40* ரன்களுடன்  ஆட்டமிழக்காமல் கடைசிவரை இருந்தார். 19-வது ஓவரில் நிக்கோலஸ் பூரன் ஹாட்ரிக் சிக்ஸர் விளாசினார்.

அதேநேரத்தில் கே.எல் ராகுல் 20,  மார்கஸ் ஸ்டோனிஸ்  24 ரன் எடுத்தனர். பெங்களூரு அணியில் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டையும்,  சிராஜ், ரீஸ் டாப்லி, யாஷ் தயாள் தலா 1 விக்கெட்டை பறித்தனர். பெங்களூரு அணியில் தொடக்க வீரர்களாக விராட் கோலி, பிளெசிஸ் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் சற்று சிறப்பாக அமைந்தாலும் அது நிலைத்து நிற்கவில்லை 5 ஓவரில் விராட்கோலி 22 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார்.

மறுமுனையில் இருந்த பிளெசிஸ் அடுத்த ஓவரில் 19  ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார்.  அடுத்து களமிறங்கிய கேமரூன் கிரீன் 9 ரன்னிலும், கிளென் மேக்ஸ்வெல்  டக் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தனர். இதனால் 58 ரன்களுக்கு  பெங்களூரு அணி  4 விக்கெட்டை அடுத்தடுத்து இழந்தது. பின்னர் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் வெறும் 4 ரன் மட்டுமே எடுத்தார்.

இருப்பினும் லோம்ரோர் அதிரடியாக விளையாடி 13 பந்தில் 33 ரன்கள் சேர்த்தார். இறுதியாக 182 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 153 ரன்கள் எடுத்தனர். இதனால் லக்னோ அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லக்னோ அணியில் மயங்க் யாதவ் 3 விக்கெட்டையும், மார்கஸ் ஸ்டோனிஸ் , மணிமாறன் சித்தார்த், யாஷ் தாக்கூர், நவீன்-உல்-ஹக் தலா 1 விக்கெட்டை பறித்தனர்.

 

 

Published by
murugan

Recent Posts

அச்சுறுத்தும் தெருநாய்க்கடி: “ஆபத்தான நாய்களை கருணைக் கொலை செய்யலாம்” – அன்புமணி

சென்னை : தமிழ்நாட்டில் தெருநாய்க்கடி சம்பவங்கள் என்பது சமீப ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து வருகின்றன, உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், இந்த…

20 minutes ago

சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து.! 2 பைலட்டுகள் சம்பவ இடத்திலேயே பலி.!

பர்ஹைட் : ஜார்க்கண்டின் சாஹேப்கஞ்ச் மாவட்டத்தின் பர்ஹைட் என்கிற பகுதியில் 2 சரக்கு ரயில்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் 2…

1 hour ago

அண்ணாமலைக்கு எதிரான கருத்து: ஆதவ் அர்ஜூனாவுக்கு மார்ட்டினின் மகன் சரமாரி குற்றச்சாட்டு.!

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் கடந்த மார்ச் 28ம் தேதி சென்னை திருவான்மியூர்ராமச்சந்திரா…

2 hours ago

சம்பவம் செய்யும் வீர தீர சூரன்…வசூல் முதல் ஓடிடி அப்டேட் வரை!

சென்னை : விக்ரம் நடித்த வீர தீர சூரன் திரைப்படம் பெரிய எதிர்பார்புகளுக்கு மத்தியில் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில்…

3 hours ago

சுங்கச்சாவடி கட்டண உயர்வு இன்று முதல் அமல்.! வாகன ஓட்டிகள் அதிருப்தி…

சென்னை : தமிழ்நாட்டில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் இன்று, அதாவது (ஏப்ரல் 1) முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. …

3 hours ago

live : தமிழ்நாடு சட்டப்பேரவை முதல்…சுட்டெரிக்கும் வானிலை அப்டேட் வரை!

சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, இன்று, அதாவது 2025 ஏப்ரல் 1 அன்று, தமிழ்நாடு சட்டப்பேரவை மீண்டும்…

4 hours ago