#IPL2022: வெற்றிபெறுமா ராஜஸ்தான்? லக்னோ அணிக்கு 179 ரன்கள் இலக்கு!

Default Image

ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் 63-வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 178 ரன்கள் குவித்துள்ளது. 

ஐபிஎல் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், சூப்பர் சண்டே ஆன இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில் முதல் போட்டியில் குஜராத் அணி வெற்றிபெற்றதை தொடர்ந்து, தற்பொழுது நடைபெற்று வரும் இரண்டாம் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் – பட்லர் களமிறங்கினார்கள். இதில் 2 ரன்கள் மட்டுமே அடித்து பட்லர் தனது விக்கெட்டை இழந்தார். அவரைதொடர்ந்து களமிறங்கிய சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வாலுடன் இணைந்து சிறப்பாக ஆடினார். 32 ரன்கள் அடித்து சஞ்சு சாம்சன் தனது விக்கெட்டை இழக்க, ஜெய்ஸ்வால், 41 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார்.

பின்னர் களமிறங்கிய படிக்கல் 39 ரன்களுக்கும், ரியான் பராக் 19 ரன்கள் எடுத்து தங்களின் விக்கெட்டை இழந்தார்கள். இறுதியாக ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 178 ரன்கள் எடுத்தது. 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது லக்னோ அணி பேட்டிங் செய்யவுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்