“சிஎஸ்கே, மும்பை – இந்தியா, பாகிஸ்தான்” போன்றது – ஹர்பஜன் சிங்

Published by
பாலா கலியமூர்த்தி

எப்போதெல்லாம் சிஎஸ்கே மற்றும் மும்பை அணி மோதுகிறதோ அப்போதெல்லாம் இந்தியா, பாகிஸ்தான் போட்டியாக பார்க்கப்படும் – ஹர்பஜன் சிங் 

கடந்த இரண்டு ஆண்டுகளாக சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் ஹர்பஜன் சிங் ஒரு காலத்தில் மும்பை அணிக்காக விளையாடியவர் என்று அனைவரும் அறிந்தது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார் என்பதும் அறிந்த ஒன்றுதான். சிஎஸ்கே அணிக்காக எப்போது விளையாட தொடங்கினாரோ அப்போதிலிருந்து தமிழில் ட்வீட் போடுவது வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேசிய ஹர்பஜன் சிங், சிஎஸ்கே ஜெர்சியை முதலில் அணிந்தபோது ஒரு விசித்திரமாக இருந்தது. கனவுதானா என்று மனதில் தோன்றியது என கூறியுள்ளார். பின்னர் எப்போதெல்லாம் சிஎஸ்கே மற்றும் மும்பை அணி மோதுகிறதோ அப்போதெல்லாம் இந்தியா, பாகிஸ்தான் போட்டியாக பார்க்கப்படும். அப்போது இரு அணிகளின் ஆட்டம் மிகப்பெரும் சவாலாக இருக்கும் என்றும் திடீரென மும்பை அணி ஜெர்சியை அணியாமல் சிஎஸ்கே ஜெர்சியை அணியும்போது கடினமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இதனை பழகிக்கொள்ள சில நாட்கள் ஆனது எனவும் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து பேசிய அவர், கடந்த 2018 ஆம் ஆண்டு மும்பை அணிக்கு எதிராக விளையாடினோம். அதனால் அந்த போட்டி சீக்கிரமாகவே முடிந்தது. முதல் சீசன் முழுக்க எனக்கு ஒரு விசித்திரமாகி இருந்தது. அதன் பின் கோப்பையை வென்றோம், இரண்டாவது சீசனில் இறுதிப்போட்டி வரை வந்தோம். ஆனால் கோப்பையை கைப்பற்ற முடியவில்லை என்றாலும் போட்டி சிறப்பாகவே இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

4 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

12 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago