Sanjay Manjrekar about Sanju Samson [file image]
சஞ்சய் மஞ்ச்ரேக்கர்: டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்றிருக்கும் அந்த வீரருக்கு பதிலாக சஞ்சு சாம்சனை விளையாட வைக்கலாம் என அவரது கருத்தை கூறி இருக்கிறார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.
டி20 உலகக்கோப்பையானது அமெரிக்கா மற்றும் வெட் இண்டீஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் அயர்லாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றது. அயர்லாந்து அணியுடன் நடைபெற்ற போட்டியில் இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம் பெறாமல் இருந்தார், அவருக்கு பதிலாக சிவம் துபே களம் கண்டிருந்தார்.
ஒரு நல்ல ஆல்ரவுண்டர் வீரர் அணியில் இருக்க வேண்டுமென சிவம் துபேவை எடுத்துள்ளார்கள் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் அன்றைய போட்டியில் அவர் பந்தும் வீசவும் இல்லை பேட்டிங் போதிலும் போதும் கடைசியாகவே வந்தார். மேலும், 2 பந்துகளை சந்தித்து அதில் ரன்கள் எதுவும் எடுக்கவும் இல்லை.
தற்போது, இதனை சுட்டி காட்டி இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஈஎஸ்பிஎன் இன்ஃபோ (ESPN CricketInfo) பத்திரிக்கைக்கு அளித்த சமீபத்திய பேட்டியில் பேசி இருப்பார். அவர் கூறுகையில், “ஒரு நல்ல ஆல்-ரவுண்டராக சிவம் துபேவை அணியில் எடுத்திருக்கிறீர்கள் ஆனால் அவர் அயர்லாந்து அணியுடனான போட்டியில் பந்து வீசவில்லை. அவர் பந்து வீசப் போவதில்லை என்றால் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சனை அணியில் எடுக்கலாமே.
சஞ்சு சாம்சன் அவரைவிட சிறப்பான பேட்ஸ்மேனாக விளையாடுவார். அவரை களம் இருக்கலாம், சஞ்சு சாம்சன் மிகவும் பக்குவத்துடனும் இருக்கிறார் என நான் நம்புகிறேன். மேலும், சஞ்சு சாம்சன் தற்போது சிறந்த ஃபார்மிலும் இருக்கிறார். எனவே, இப்போதே அவரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…