‘தப்பு செய்ததை சென்னையில் மாற்றி காட்டுவோம் ..’ தோல்விக்கு பிறகு பேட் கம்மின்ஸ் பேட்டி!

Published by
அகில் R

சென்னை : நேற்று நடைபெற்ற குவாலிபயர்-1 போட்டியில் கொல்கத்தா அணியிடம், ஹைதரபாத் அணி தோல்வியடைந்த பிறகு ஹைதராபாத் அணியின் கேப்டனான பேட் கம்மின்ஸ் தோல்வியை பற்றி கூறி பேசி இருந்தார்

ஐபிஎல் தொடரானது தற்போது நிறைவடையும் கட்டத்தை எட்டி உள்ளது. இந்த தொடரின் முதல் குவாலிபயர் போட்டியானது நேற்று இரவு அகமதாபாத்தில் நடைபெற்றது. இந்த குவாலிபயர் போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. இதனால் அதிரடியாக விளையாடலாம் என களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களான அபிஷேக் ஷர்மாவும், டிராவிஸ் ஹெட்டும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்கள்.

அதை தொடர்ந்து ராகுல் த்ரிப்பாத்தியின் நிதானமான ஆட்டத்தால், ஹைதரபாத் அணி சரிவிலிருந்து மீண்டது, சிறப்பாக விளையாடிய அவர் 35 பந்துகளில் 55 ரன்கள் எடுத்திருந்தார். அவரை தொடர்ந்து கிளாஸ்ஸனும், கம்மின்சும் சற்று அதிரடி காட்ட ஹைதராத் அணி இறுதியில் 19.3 ஓவருக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்கள் எடுத்திருந்தனர். அதனை தொடர்ந்து எளிதான இலக்கை அடைய களமிறங்கிய கொல்கத்தா அணி தொடக்கத்திலிருந்தே அதிரடியாக விளையாடினார்கள்.

தொடக்க வீரர்களை மட்டுமே இழந்த கொல்கத்தா அணி ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் வெங்கடேஷ் ஐயர் இருவரின் ஆட்டத்தால் 13.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 164 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர். இந்த போட்டி முடிந்த பிறகு ஹைதராபாத் அணியின் கேப்டனான பேட் கம்மின்ஸ் தோல்வியை பற்றி கூறி இருந்தார்.

அவர் பேசுகையில், “இந்த தோல்வியை நாங்கள் பின்னால் வைத்து முன்னோக்கி செல்ல வேண்டும். டி20 கிரிக்கெட்டில், சில கடுமையான நாட்களும் உங்களுக்கு உண்டு. இறுதிப் போட்டிக்கு நுழைவதற்கு மேலும் எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. சில வீரர்களுக்கு நல்ல ஒரு தொடக்கம் அமையவில்லை, மேலும் எங்களால் சிறப்பான பந்து வீச்சையும் கொடுக்க முடியாவில்லை. விக்கெட்டுகள் அதிமாக சரிந்ததால், கூடுதல் பேட்டிங் தேவை என்று நாங்கள் நினைத்தோம்.

மேலும், கொல்கத்தா அணி நன்றாக பந்து வீசினார்கள், அதன் பின் விக்கெட் பேட்டிங்கிற்கு நன்றாக இருந்தது. இந்த சீசனில் எங்களுக்கு இன்னும் நல்ல வேலை இருக்கிறது என்று தெரிந்து கொண்டோம், தப்பு செய்ததை சென்னையில் மாற்றி காட்டுவோம் என நம்புகிறேன்”, என்று போட்டி முடிந்த பிறகு பேட் கம்மின்ஸ் பேசி இருந்தார்

Published by
அகில் R

Recent Posts

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

டெல்லி :  தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…

1 second ago

ஐபிஎல் 2025 : கேப்டன் பொறுப்பிலிருந்து வெளியேறுகிறார் ‘ரிஷப் பண்ட்’? காரணம் இதுதான்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…

21 mins ago

துலாபார வழிபாடும் அதன் பலன்களும் ..!

சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…

25 mins ago

ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்.! தவெக தொண்டர்களுக்கு அரசியல் பயிலகம் தொடக்கம்…

சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…

39 mins ago

கிடு கிடு உயர்வு! 58,000-த்தை நெருங்கும் தங்கம் விலை!

சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…

52 mins ago

பருப்பு விவகாரம்., “பாஜகவின் ஆதாரமற்ற குற்றசாட்டு.!” தமிழக அரசு வெளியிட்ட விளக்க அறிக்கை..,

சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…

1 hour ago