பிளே-ஆப்ஸ் எல்லையில் பஞ்சாப் – கொல்கத்தா.. டாஸ் வென்று பந்துவீச காத்திருக்கும் பஞ்சாப்!

Default Image

13 ஆம் ஐபிஎல் தொடரின் 46 ஆம் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல், பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 46 ஆம் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, ஷார்ஜாவில் நடைபெறும் நிலையில், இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இவ்விரண்டு அணிகளுக்கும் இந்த போட்டி, முக்கியமாக போட்டியாக இருப்பதாலும், ஷார்ஜா மைதானத்தில் நடைபெறுவதால், பேட்ஸ்மேன்கள், சிக்ஸர் வாணவெடி காட்டுவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

விளையாடும் வீரர்களின் விபரம்:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

சுப்மன் கில், நிதீஷ் ராணா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), இயோன் மோர்கன் (கேப்டன்), சுனில் நரைன், பாட் கம்மின்ஸ், லாக்கி பெர்குசன், கமலேஷ் நாகர்கோட்டி, பிரசீத் கிருஷ்ணா, வருண் சக்ரவர்த்தி.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்:

கே.எல்.ராகுல் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), மந்தீப் சிங், கிறிஸ் கெய்ல், நிக்கோலஸ் பூரன், க்ளென் மேக்ஸ்வெல், தீபக் ஹூடா, கிறிஸ் ஜோர்டான், முருகன் அஸ்வின், ரவி பிஷ்னோய், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்