ENGLAND vs INDIA:குல்தீப் சுழலில் நடையை கட்டிய இங்கிலாந்து!ஒரே ஓவரில் மோர்கன் 7,பைர்ஸ்டோவ் 0, ரூட் 0 ரன்களில் காலி!

Default Image

அயர்லாந்துடன் இந்திய அணி இரண்டு 20 ஓவர் போட்டிகளில் வெற்றி பெற்று போட்டியை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.பின்னர் இந்திய அணி மூன்று 20 ஓவர், மூன்று ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு இங்கிலாந்தில் பயணித்தது. மான்செஸ்டரில் முதலாவது 20-ஓவர் ஆட்டம் இன்று தொடங்குகிறது.

இன்று முதலாவது இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இந்தியா அணி வீரர்கள் : விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், ரோகித் சர்மா, டோனி, லோகேஷ் ராகுல், சுரேஷ் ரெய்னா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், உமேஷ் யாதவ் ஆகியோர் இந்திய அணியில் இடம்பிடித்தனர்.

இங்கிலாந்து அணி வீரர்கள் :இயன் மோர்கன் (கேப்டன்),ஜெய்சன் ராய் ,ஜோஸ் பட்லர்,அலெக்ஸ் ஹெய்லஸ்,ஜோ ரூட்,ஜானி பைர்ஸ்டோவ்,மொயீன் அலி,டேவிட் வில்லி,பிளாங்கெட்,கிரிஸ் ஜோர்டன்,ரஷித் கான் ஆகியோர் இடம் பெற்றனர்.

பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி ஆரம்பமே அமர்களமாக மாறியது,ஜெய்சன் ராய் அதிரடியாக விளையாடி 30 ரன்கள் எடுத்தார்.பின்னர் இறங்கிய ஹய்லஸ் குல்தீப் சுழலில் சிக்கி ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.பின்னர் குல்தீப் வீசிய 14-வது ஓவரில் மோர்கன் 7,பைர்ஸ்டோவ் 0, ரூட் 0 ரன்களில்  தொடர்ச்சியாக வெளியேறினார்.இதன் மூலம் குல்தீப் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.அவர் 3 ஓவர்கள்  வீசி 4 விக்கெட்டுகள் எடுத்து 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்