#IPL2020: அதிரடியாக விளையாடிய ராணா, நரேன் ! கொல்கத்தா அணி 194 ரன்கள் குவிப்பு

Default Image

டெல்லிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 194 ரன்கள் குவித்துள்ளது.

இன்று நடைபெறும் 41-வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதிவருகின்றது .இப்போட்டி அபுதாபியில் உள்ள சயீத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது .இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக கில் , ராணா ஆகிய இருவரும் களமிறங்கினர். தொடக்கத்திலே கில் 9 ரன் எடுத்து விக்கெட்டை இழக்க பின்னர், இறங்கிய  திரிபாதி 13 ரன்கள் ,தினேஷ்  3 ரன்கள் எடுத்து இருவரும்   வெளியேறினர்.பின்பு நரேன் மற்றும் ராணா ஜோடி சிறப்பாக விளையாடியது. சிறப்பாக விளையாடிய நரேன் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதைத்தொடர்ந்து, ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடியாக விளையாடி வந்த ராணா  சதம் விளாசி, 81  ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.கடைசி பந்தில் மோர்கன் 17 ரன்களில் ஆட்டமிழந்தார்.இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 194 ரன்கள் எடுத்தது.டெல்லி அணியின் பந்துவீச்சில் ரபாடா ,அன்ரிச் நோர்ட்ஜெ ,ஸ்டைனிஸ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.பின்பு 195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்க உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்