IPL2024: மரண அடி… 3-வது முறையாக கோப்பையை கைப்பற்றிய கொல்கத்தா ..!

Published by
murugan

IPL2024:  கொல்கத்தா அணி 10.3 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 114 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா அணியும், ஹைதராபாத் அணியும் சென்னை சேப்பாக் மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு தொடக்கமே சிறப்பாக அமையவில்லை.

ஏனென்றால் தொடக்க வீரர்களான அபிஷேக் சர்மா 2 ரன்னிலும், டிராவிஸ் ஹெட் கோல்டன் டக் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். அடுத்து வந்த வீரர்களும் நிலைத்து நிற்காமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை சீரான இடைவேளையில் பறிகொடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 18.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

இதில் அதிகபட்சமாக கேப்டன் கம்மின்ஸ் 24 ரன்களும், மார்க்ராம் 20 ரன்களும் மட்டுமே எடுத்தனர். அதே நேரத்தில் கொல்கத்தா அணியில் ரஸ்ஸல் 3 விக்கெட்டையும், மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா தலா 2 விக்கெட்டையும் வைபவ் அரோரா, சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி தலா 1 விக்கெட்டை பறித்தனர்.

114 ரன்கள் இலக்குடன் கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக ரஹ்மானுல்லா குர்பாஸ், சுனில் நரேன் இருவரும் களமிறங்கினர். 2-வது ஓவரில் முதல் பந்தில் சிக்ஸர் விளாச அடுத்த பந்தில் ஷாபாஸ் அகமது இடம்  கேச்சை கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.

அடுத்து வந்த வெங்கடேஷ் ஐயர் அதிரடியாக விளையாட தொடங்கினார். பின்னர் ரஹ்மானுல்லா குர்பாஸ் , வெங்கடேஷ் ஐயர் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் ரஹ்மானுல்லா குர்பாஸ் அரைசதம் அடிக்காமல்39 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.

இறுதியாக கொல்கத்தா அணி 10.3 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 114 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசிவரை களத்தில் வெங்கடேஷ் ஐயர் 52* ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார். கொல்கத்தா அணி கடந்த 2012, 2014 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை கவுதம் கம்பீர் தலைமையில் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

டெல்லி :  தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…

6 mins ago

ஐபிஎல் 2025 : கேப்டன் பொறுப்பிலிருந்து வெளியேறுகிறார் ‘ரிஷப் பண்ட்’? காரணம் இதுதான்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…

28 mins ago

துலாபார வழிபாடும் அதன் பலன்களும் ..!

சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…

31 mins ago

ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்.! தவெக தொண்டர்களுக்கு அரசியல் பயிலகம் தொடக்கம்…

சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…

46 mins ago

கிடு கிடு உயர்வு! 58,000-த்தை நெருங்கும் தங்கம் விலை!

சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…

58 mins ago

பருப்பு விவகாரம்., “பாஜகவின் ஆதாரமற்ற குற்றசாட்டு.!” தமிழக அரசு வெளியிட்ட விளக்க அறிக்கை..,

சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…

1 hour ago