மரண காட்டு காட்டிய கோலி, படிக்கல்.., மீண்டும் வெற்றியை பதிவு செய்த பெங்களூர் ..!

Published by
murugan

பெங்களூர் அணி 16.3 ஓவர் முடிவில் ரன்கள் 181 எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்று ஐபிஎல் தொடரின் 16- வது லீக் போட்டியில் பெங்களூர் அணியும், ராஜஸ்தான் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதியது. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தனர்.

முதலில் இறங்கிய ராஜஸ்தான் அணி20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை பறிகொடுத்து 177 ரன்கள் எடுத்தனர்.  178 ரன்கள் இலக்குடன் பெங்களூர் அணியின் தொடக்க வீரர்களாக கோலி, படிக்கல் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து இருவரும் மரண அடி அடித்தனர்.

இதனால், இருவரும் அரைசதம் விளாசினர். அதிலும் அதிரடியாக விளையாடிய படிக்கல் 27 பந்தில் 52 ரன்கள் எடுத்து அரைசதம் அடித்தார். இதைத்தொடர்ந்து, அதிரடி காட்டி வந்த படிக்கல் 51 பந்தில் 11 பவுண்டரி, 6 சிக்ஸர் விளாசி ரன்கள் 101* எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார்.

அதேபோல கோலி 47பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்ஸர் விளாசி 72* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார்.

Image

இறுதியாக பெங்களூர் அணி 16.3 ஓவர் முடிவில் ரன்கள் 181 எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூர் அணி விளையாடிய 4 போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 8 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளனர்.

Published by
murugan

Recent Posts

தலைவா… தெய்வமே… பரவசத்தில் வெறும் கையில் ரஜினி ரசிகர் செய்த செயல்.!

கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…

25 minutes ago

புதிய போப் ஆண்டவர் யார்? உலகளாவிய தேர்வுக் குழுவில் 4 இந்திய கார்டினல்கள்!

வாட்டிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் கத்தோலிக்க திருச்சபை போப் பிரான்சிஸ், தனது 88வது வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது…

27 minutes ago

டாஸ்மாக் ஊழியர்களுக்கு நற்செய்தி.., சம்பள உயர்வை அறிவித்த அமைச்சர் செந்தில் பாலாஜி.!

சென்னை : டாஸ்மாக்கில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி…

1 hour ago

வெளியானது UPSC தேர்வு முடிவுகள்.., நான் முதல்வன் திட்ட மாணவன் சாதனை!

சென்னை : இந்தியாவில் IAS, IPS, IFS, IRS ஆகிய சிவில் சர்வீஸ் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் கடந்த 2024 ஜூன்…

1 hour ago

“சாதி சான்றிதழ்களில் எழுத்துப் பிழைகள் இருக்கக் கூடாது”- உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…

3 hours ago

ஏப்ரல் 25 மற்றும் 26இல் துணைவேந்தர்கள் மாநாடு – ஆளுநர் மாளிகை அறிக்கை.!

உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு…

3 hours ago