#IPL2021: திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கே.எல்.ராகுல்.. புதிய கேப்டன் இவர்தான்!

Default Image

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனான கே.எல்.ராகுலுக்கு நேற்று இரவு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டது. இதன்காரணமாக அவருக்கு பதில் மயங்க அகர்வால் கேப்டனாக வழிநடத்துவார்.

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனான கே.எல்.ராகுலுக்கு நேற்று இரவு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டது. இதனைதொடர்ந்து அவர் பயோ-பபுளில் இருந்து வெளியே வந்து, மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு குடல்பகுதியில் அறுவைசிகிச்சை மேற்கொள்ளவேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்காரணமாக அடுத்து நடைபெறும் போட்டிகளில் கே.எல்.ராகுல் பங்கேற்கமாட்டார் என்றும், அவருக்கு பதில் மயங்க அகர்வால் கேப்டனாக வழிநடத்துவார் என்று பஞ்சாப் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. கே.எல்.ராகுலுக்கு இன்று இரவு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்