வலைப்பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக எஞ்சியுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்து கே.எல்.ராகுல் விலகியுள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள், டி-20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் உள்ளது. டெஸ்ட் தொடரில் இருந்து விராட் கோலி விலகியதை தொடர்ந்து, கேப்டனாக ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார்.மேலும் ரோஹித் சர்மா இந்திய அணியுடன் இணைந்துள்ள நிலையில், டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.இதன் பின்பு 3-வது போட்டி வரும் 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது.கடைசி டெஸ்ட் போட்டி 15-ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில் வலைப்பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக எஞ்சியுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்து கே.எல்.ராகுல் விலகியுள்ளார்.இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சனிக்கிழமை இந்தியா அணி வலைக பயிற்சி மேற்கொண்டு இருந்தது.அந்த சமயத்தில் பேட் செய்யும் போது கே.எல்.ராகுலின் இடது கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டுள்ளது.ஆகவே பார்டர்-கவாஸ்கர் டிராபியின் மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ராகுல் விளையாடமாட்டார்.மேலும் அவர் முழுமையாக குணமடைந்து முழு பலத்தையும் பெற மூன்று வார காலம் தேவைப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அவர் இப்போது இந்தியாவுக்குத் திரும்பி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தங்கலான் படம் எதிர்பார்த்த அளவுக்கு மக்களுக்கு மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை என்கிற காரணத்தால் அடுத்ததாக நடிகர்…
மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வெடித்த வன்முறையானது பெரிய அளவில் பேசுபொருளாக வெடித்திருக்கிறது. சாம்பாஜி நகரிலுள்ள அவுரங்கசீப் கல்லறையை அகற்றவேண்டுமென…
சென்னை : மாநகராட்சியின் 2025-26ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று (மார்ச்19) தாக்கல் செய்தார். சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. ஐபிஎல் போட்டிகளில் மிகவும் ரசிகர்கள் எதிர்பார்கும்…
புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் மாநில நிதிநிலை அறிக்கை 2025 2026 சில தினங்களுக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்டது. அதனை…
டெல்லி : இன்று இந்திய ரயில்வே துறையின் சார்பாக காலியாக உள்ள 32,438 RRB லோகோ பைலட் பணியிடங்களுக்கு தேர்வு…