தென்ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டிக்கு துணை கேப்டனாக கே.எல்.ராகுலை நியமித்து பிசிசிஐ செயலாளர் அறிவித்துள்ளார்.
தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 26-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில், டெஸ்ட் அணிக்கு துணை கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டிருந்தார். இதற்கிடையில், வலை பயிற்சியின் போது இடது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ரோகித் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
இதனால், டெஸ்ட் அணிக்கு துணை கேப்டன் யார்..? என்ற கேள்வி எழுந்தது. இந் நிலையில் துணை கேப்டனாக கே.எல்.ராகுலை நியமித்து உள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். கே.எல்.ராகுல் 40 டெஸ்டுகளில் விளையாடி 6 சதம் உள்பட 2,321 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் டெஸ்ட்: டிசம்பர் 26-30 வரையும்,
இரண்டாவது டெஸ்ட்: ஜனவரி 03-07 வரையும்,
மூன்றாவது டெஸ்ட்: ஜனவரி 11-15 வரையும் நடைபெறவுள்ளது.
முதல் ஒருநாள் போட்டி: ஜனவரி 19-ஆம் தேதி
இரண்டாவது ஒருநாள் போட்டி: ஜனவரி 21-ஆம் தேதி
மூன்றாவது ஒருநாள் போட்டி: ஜனவரி 23 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
டெல்லி : ஆண்டுதோறும் எந்த ஒரு துறையிலும், சிறந்து விளங்கும் ஒருவருக்கு, இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான (2025)…
சென்னை : திமுக தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம்…
ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது…
ஹைதராபாத் : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் வரும்…
கோவை : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது.…