59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, பிளே-ஆப்ஸ் வாய்ப்பை தக்க வைத்துக்கொண்டது, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
இன்று நடைபெறும் 41-வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதியது. அபுதாபியில் நடைபெற்ற இந்த போட்டியில் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 194 ரன்கள் எடுத்தது.டெல்லி அணியின் பந்துவீச்சில் ரபாடா ,அன்ரிச் நோர்ட்ஜெ ,ஸ்டைனிஸ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.பின்பு 195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹானே – தவான் களமிறங்கினார்கள்.
முதல் பந்திலே ரஹானே டக் அவுட் ஆக, அவரைதொடர்ந்து 6 ரன்கள் அடித்து தவான் வெளியேறினார். அவரைதொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் – ரிஷப் பந்த் கூட்டணி சிறப்பாக ஆடிவந்தனர். அணியில் ஸ்கொர் உயர, 27 ரன்கள் குவித்து ரிஷப் பந்த் வெளியேற, ஸ்ரேயாஸ் ஐயரும் 47 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். ஹெட்மேயர் 10 ரன்களில் வெளியேற, அணியில் வெற்றிவாய்ப்புகள் குறையத் தொடங்கியது.
அதன்பின் களமிறங்கிய அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற, இறுதியாக 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 9 விக்கெட்களை இழந்து 135 ரன்கள் அடித்து, 59 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றிபெற்றது. மேலும், புள்ளிப் பட்டியலில் 4 ஆம் இடத்தை பிடித்து, பிளே-ஆப்ஸ் வாய்ப்பை தக்க வைத்துக்கொண்டது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…