15 ஓவரிலேயே இலக்கை எட்டி பஞ்சாப் அணியை கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடர் கோலாகலமாக தொடங்கப்பட்டு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய நாள் ஆட்டத்தில் பஞ்சாப் அணியும் கொல்கத்தா அணியும் விளையாடின. இதில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 18.2 ஓவர்களுக்கு 137 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக ராஜபக்சே 31 ரன்கள் அடித்திருந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆக பந்துவீச்சாளர் ரபாடா மட்டும் களத்தில் இருந்து 25 ரன்கள் அடித்து அவுட்டானார். இறுதியாக 18.2 ஓவர்களில் 10 விக்கெட்டையும் இழந்து 137 ரன்களை எடுத்திருந்தது பஞ்சாப்.
20 ஓவர்களில் 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி தனது இன்னிங்சை ஆரம்பித்தது. இதில் தொடக்க வீரர்களான ரஹானே மற்றும் வெங்கடேச ஐயர் 12 மற்றும் 3 ரன்களில் அவுட்டானர்.
தொடர்ந்து நான்கு விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழ தொடங்கியதால் வெற்றி பஞ்சாப் அணி பக்கம் வந்தது. ஆனால் அதற்கடுத்து இறங்கிய சாம் பில்லிங்ஸ் மற்றும் ஆண்ரே ரசல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிபெற செய்தனர்.
அதிலும் ரசல் 31 பந்துகளில் 70 ரன் விளாசி உள்ளார். அதில் 8 சிக்ஸர்கள் மற்றும் இரண்டு பவுண்டரிகள் அடங்கும். இறுதியில் 141 ரன்களை 15 ஓவரிலேயே கொல்கத்தா அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…