#IPL2020 : டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச முடிவு

Default Image

டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இன்று நடைபெறும் 13-வது ஐபிஎல் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் , லோகேஷ் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றது. இப்போட்டி  அபுதாபியில் உள்ள ஷேய்க் சையத் கிரிக்கெட் மைதானத்தில் ( Sheikh Zayed Stadium) நடைபெறுகிறது.இந்த போட்டியில் டாஸ் வென்ற  கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல்பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

பஞ்சாப் அணி வீரர்கள் விவரம் :

மாயங்க் அகர்வால், ராகுல் (கேப்டன் & விக்கெட் கீப்பர் ), நிக்கோலஸ் பூரன், மேக்ஸ்வெல், கருண் நாயர், ஜேம்ஸ் நீஷம், சர்பராஸ் கான், கிருஷ்ணப்பா கவுதம் , முகமது ஷமி, ஷெல்டன் காட்ரெல், ரவி பிஷ்னோய் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் விவரம் :

ரோஹித் சர்மா (கேப்டன்), குயின்டன் டி கோக் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் , ஹார்திக் பாண்டியா, பொல்லார்ட், குருனல் பாண்டியா, ஜேம்ஸ் பாட்டின்சன், ராகுல் சாஹர், ட்ரெண்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்