நடப்பு உலகக்கோப்பையில் 9 லீக் போட்டிகளில் தென்னாப்பிரிக்கா வீரர் குயின்டன் டி காக் 591 ரன்களை எடுத்து அதிக ரன்கள் எடுத்த வீரர் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். இன்று நடைபெற்று வரும் கடைசி லீக் போட்டியில் இந்தியா -நெதர்லாந்து அணிகள் மோதி வருகிறது. இப்போட்டியில் இந்திய அணியின் அதிரடி வீரர் கிங் கோலி அரைசதம் விளாசி 51 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். இன்றைய போட்டியில் 51 ரன்கள் எடுத்ததன் மூலம் நடப்பு தொடரில் 594 ரன்கள் குவித்துள்ளார்.
சதம் விளாசிய ஷ்ரேயாஸ், கேஎல் ராகுல் .. நெதர்லாந்திற்கு 411 ரன்கள் இலக்கு..!
இதனால், நடப்பு உலகக்கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த வீரர் பட்டியலில் 591 ரன்களுடன் முதலிடத்தில் இருந்த குயின்டன் டி காக்கை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தார். கோலி ஐந்து அரைசதங்கள் மற்றும் இரு சதங்களை அடித்துள்ளார். இருப்பினும், இன்னும் 9 ரன்கள் இன்று எடுத்து இருந்தால் உலகக் கோப்பையில் 600 ரன்களைக் கடந்த மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையை கோலி பெற்று இருப்பார். ஆனால் அதை கோலி இன்று தவற விட்டார்.
இருப்பினும் வரும் 15 -ஆம் தேதி நடைபெற உள்ள அரையிறுதியில் இந்த சாதனையை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகக்கோப்பையில் 2019-ல் ரோஹித் சர்மாவும், 2003-ல் சச்சின் டெண்டுல்கரும் 600 ரன்களை கடந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியீட்டு இருந்தார்.…
சென்னை : அஜித் ரசிகர்கள் பலரும் அவரிடம் எதிர்பார்க்கும் படங்கள் என்றால் மாஸான படங்கள் என்று சொல்லலாம். அப்படி எதிர்பார்த்த ரசிகர்களுக்காகவே…
ஹைதராபாத் : நீங்க மட்டும் தான் அதிரடியா பேட்டிங் செய்வீர்களா? என்பது போல ஹைதராபாத் அணிக்கே அதிரடி காட்டும் வகையில்…
டெல்லி : உலகம் முழுவதும் உள்ள பல வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்கள் சேவை தடைபட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. குறிப்பாக, சிலருக்கு…
லக்னோ : ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் என்கிற சாதனையை ரிஷப் பண்ட் படைத்திருந்தார். லக்னோ அணி…
லக்னோ : இன்று ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், குஜராத் அணியும் மோதியது.இந்த போட்டியில்…