நேற்று உம்ரான் மாலிக் வீசிய பந்து 153 கி.மீ வேகத்தில் வீசி சாதனை படைத்துள்ளார்.
உம்ரான் மாலிக் கொல்கத்தா அணிக்கு எதிரான தனது முதல் போட்டியில் 150 கி.மீ வேகத்தில் பந்து வீசி அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். இதைத்தொடர்ந்து, நேற்று நடந்த பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியிலும் அவர் கவனத்தை ஈர்த்தார். 4 ஓவர்கள் வீசிய உம்ரான் மாலிக் 21 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.
நேற்றைய போட்டியில் தனது முதல் ஓவரில் ஒரு ரன் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி பெங்களூரு அணியை திணற செய்தார். நேற்று அவர் வீசிய பல பந்துகள் 150 கி.மீ வேகத்தில் வீசப்பட்டது. இதைத்தொடர்ந்து, 9-ஆவது ஓவரில் படிக்கலுக்கு வீசிய பந்து 153 கி.மீ வேகத்தில் சென்றது. இதன் மூலம் நடப்பு ஐபிஎல் போட்டியில் அதிக வேகத்தில் பந்து வீசியவர் என்ற சாதனையை உம்ரான் மாலிக் பெற்றுள்ளார்.
போட்டியின் முடிந்த பிறகு பேசிய விராட் கோலி உம்ரன் மாலிக்கின் பந்துவீச்சை பாராட்டினார். உம்ரான் ஜம்மு காஷ்மீரரை சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொன்டு இருப்பதை…
சென்னை : தங்கம் விலை கடந்த 53 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.7,480 உயர்ந்துள்ளது. கடந்த டிச.31ஆம் தேதி 22…
ராமேஸ்வரம் : கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி, 32 பேரை இலங்கை…
சென்னை : தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் 'முதல்வர் மருந்தகங்களை' முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இந்த…
கீவ் : உக்ரைனில் அமைதி திரும்ப தனது பதவியை விட்டுத்தர வேண்டும் என்றால் தயார் என்று அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. துபாயில் நேற்று…