ரோஹித்துக்கு லிமிட் தெரியும்…ஆனால் கோலி அப்படி கிடையாது- கபில் தேவ் பேச்சு!

Published by
பால முருகன்

ரோஹித் சர்மா : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருக்கும் இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பற்றி சொல்லவே வேண்டாம். இருவரும் ஒற்றுமையாக பழகி வந்தாலும் இவர்களுடைய ரசிகர்கள் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் சண்டைபோட்டு கொள்வது உண்டு. பலரும் விராட் கோலி ஃபிட்னஸை வைத்து ரோஹித் சர்மாவை விமர்சிப்பது உண்டு.

அதைப்போல, அதற்கு பதில் கோலி ஆக்ரோஷமாக நடந்துகொள்ளும் விஷயங்களை வைத்து கோலியை விமர்சிப்பதும் உண்டு. இந்நிலையில், சமீபத்தில் ஏபிபி செய்தியில் பேசிய இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ரோஹித் சர்மாவுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

virat and rohit [File Image]
இது குறித்து பேசிய அவர் ” விராட் கோலி தன்னுடைய பீட்னஸில் அதிகமாக ஆர்வம் காட்டுவது உண்டு, அவர் 150 கிலோ மற்றும் 250 கிலோ எடை தூக்க முடியும் என்றால், அவரை போலவே, ரோஹித் சர்மாவும் செய்யவேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. ரோஹித்துக்கு அவரது ஆட்டம் நன்றாக தெரியும். விராட் கோலி போல் ரோஹித் சர்மா இல்லவே இல்லை.

விராட் கோலி, கொண்டாடுவதும், ஆக்ரோஷமாக செய்வது போல ரோஹித் சர்மா இல்லை. ரோஹித் சர்மா ஒரு லிமிட் ஆக தான் இருப்பார். அந்த வகையில் அவரை விட சிறந்தவர் யாரும் இல்லை, ரோஹித்திடம் கூட ஒரு பேக் (சிக்ஸ்பேக்) கூட இல்லை ஆனால், அவரை போல அதிரடி சிக்ஸர்கள் யாரால் அடிக்க முடியும் என்கிற அளவுக்கு விளையாடுகிறார்.

பல பெரிய வீரர்கள் கிரிக்கெட் விளையாட வருகிறார்கள், ஆனால் அவர்கள் தங்களுக்காக விளையாட வருகிறார்கள், அவர்களுக்காக கேப்டன் பதவியை கூட செய்கிறார்கள், ஆனால் ரோஹித் அப்படி இல்லை. மற்றவர்களை விட கொஞ்சம் சிறந்தவர் என்று நான் சொல்வேன். ஏனென்றால், அவர் ஒட்டுமொத்த அணியையும் மகிழ்ச்சியாக வைத்து இருக்கிறார்” எனவும் கபில் தேவ் கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…

5 hours ago

“கேப்டனாக இருக்க பட்லரின் நேரம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன்” – முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள்.!

பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…

5 hours ago

“2 நாட்களுக்கு முன் சமாதான தூது விட்டார் சீமான்” – நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…

6 hours ago

பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா? விளக்கம் அளித்த மகன்!

சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…

8 hours ago

சீமான் வீட்டு களோபரம் : “நாட்டை பாதுகாத்தவருக்கு இந்த நிலைமையா?” அமல்ராஜ் மனைவி வேதனை!

சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…

8 hours ago

போட்டியில் வென்ற மழை.! பாகிஸ்தான் – வங்கதேசத்திற்கு கிடைத்த ஆறுதல் பாய்ண்ட்.!

பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…

9 hours ago