நேற்றைய போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது.இப்போட்டியில் இந்திய அணியும் ,நியூஸிலாந்து அணியும் மோதியது.டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
நியூஸிலாந்து அணி 46.1 ஓவரில் 211 ரன்கள் எடுத்து இருந்த போது மழை குறுக்கிட்டதால் இன்று மீண்டும் போட்டி தொடங்க உள்ளது.இந்நிலையில் நடப்பு உலகக்கோப்பையில் நியூஸிலாந்து அணி மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறது.
லீக் போட்டிகளில் நியூஸிலாந்து அணி விளையாடிய 8 போட்டிகளில் தொடர்ந்து 5 போட்டிகளில் வெற்றி பெற்று உள்ளது.அடுத்ததாக விளையாடிய 3 போட்டிகளில் தோல்வியை சந்தித்து உள்ளது.
இந்நிலையில் நடப்பு உலகக்கோப்பையில் நியூஸிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் 2 சதம் ,2 அரைசதம் அடித்து 548 ரன்கள் குவித்து உள்ளார்.இதன் மூலம் நியூஸிலாந்து அணியில் ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்து உள்ளார்.
கடந்த உலகக்கோப்பை தொடரில் நியூஸிலாந்து அணியில் குப்தில் 547 ரன்கள் அடித்தது தான் அதிகபட்ச ரன்களாக இருந்தது.தற்போது அந்த சாதனையை கேன் வில்லியம்சன் முறியடித்து உள்ளார்.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…