ககிசோ ரபாபா அசத்தல் பந்துவீச்சு: சூப்பர் ஒவரில் டெல்லி அணி த்ரில் வெற்றி!

Published by
Srimahath

டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையேயான போட்டி தற்போது நடைபெற்று வருகிறது .இந்தபோட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 185 ரன்கள் விளாசியது அதன் பின்னர் வந்த டெல்லி அணி வெற்றியை நோக்கி வீறுநடை போட்டு சென்று கொண்டிருந்தது .ஆனால் கடைசி 2 ஓவர்களில் ஆட்டம் அப்படியே மாறியது.

அந்த அணியின் துவக்க வீரர் பிரித்திவ் ஷா 99 ரன்களுக்கு வெளியேறினார். அதன் பின்னர் வந்த வீரர்கள் குல்தீப் யாதவ் பந்தை தாக்குப் பிடிக்காமல் வெளியேறினர். கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் டெல்லி அணி 5 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது .இதற்கு காரணம் குல்தீப் யாதவ் இன் அபார பந்து வீச்சாகும்

இந்த சூப்பர் ஓவரில் முதலில் டெல்லி அணி பேட்டிங் செய்தது. டெல்லி அணிக்காக ரிஷப் பண்ட் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் களமிறங்கினர். கொல்கத்தா அணியின் சார்பில் பிரஷீத் கிருஷ்ணா பந்துவீசினார் முதல் பந்தல் ரிஷப் பண்ட் வேகமாக ஒரு ரன் அடித்தார். அதன் பின்னர் வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் ஒரு பவுண்டரி விளாசி அதற்கு அடுத்த பந்தில் தனது விக்கெட்டை இழந்தார்.

பின்னர் நான்காவது பந்தில் சிக்ஸர் அடித்து விடலாம் என தூக்கி அடித்தார் ரிஷப் பண்ட். ஆனால் அந்த பந்தில் 2 ரன்கள் மட்டுமே கிடைத்தது .அதற்கு அடுத்த இரண்டு பந்துகளில்  பவுண்டரிகள் வரவில்லை. இதன் காரணமாக சூப்பர் ஓவர் முடிவில் 10 ரன் மட்டுமே டெல்லி அணி எடுத்திருந்தது.

அதற்குப் பின்னர் 10 ரன்களை எளிதாக கொல்கத்தா அணி எட்டி விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பேட்டிங் பிடிக்க ரசல் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் வந்தனர். டெல்லி அணியின் சார்பில் 6 பந்துகளை வீச ககிசோ ரபாடா களமிறங்கினார்

முதல் பந்தில் ரசல்  பவுண்டரி விளாச, இந்த இலக்கை எளிதாக கொல்கத்தா வென்று விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்த பந்தில் ரன் எடுக்க முடியவில்லை. அவ்வளவு அற்புதமாக வீசினார் ரபாடா.

பின்னர் மூன்றாவது பந்தில் ரசலின் ஸ்டம்புகளை தெரிக்கவிட்டார் ரபாடா. அதன் பின்னர் ராபின் உத்தப்பா களத்துக்கு வந்தார். அடுத்த மூன்று பந்துகளிலும் ஒவ்வொரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் காரணமாக 6 பந்துகளில் 7 டன் மட்டுமே விட்டுக்கொடுத்து வெற்றி பெறவைத்தார் ரபாடா. ஐபிஎல் தொடரின் சிறந்த போட்டியாக இது அமைந்தது

Published by
Srimahath

Recent Posts

“நான் கமல் ரசிகை…இப்போ ரஜினி ரசிகையா மாறிட்டேன்”…நடிகை அபிராமி நெகிழ்ச்சி!

சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…

11 mins ago

இந்த 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…

35 mins ago

திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!

பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…

1 hour ago

INDvsBAN : வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு! கட்டுப்படுத்துமா இந்திய அணி?

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…

1 hour ago

“நமக்கு அது செட் ஆகாது”…வேட்டையன் இயக்குனருக்கு கண்டிஷன் போட்ட ரஜினிகாந்த்!

சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…

2 hours ago

“நான் ஒரு தோற்றுப்போன அரசியல்வாதி.,” கமல்ஹாசன் பேச்சு.!

சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…

2 hours ago