கே எல் ராகுல் மிகவும் தனித்துவமானவர்- ஷெல்டன் காட்ரெல்.!

Default Image

மேற்கிந்திய தீவுகள் அணியின் பவுலர் ஷெல்டன் காட்ரெல் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கேஎல் ராகுல் மிகவும் தனித்துவமானவர் என்று கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இந்தாண்டு ஐபிஎல் போட்டி வருகின்ற செப்டம்பர் மாதம் 19 ம் தேதி முதல் நவம்பர் 10 ம் தேதி வரை நடைபெறவுள்ளது, இதனால் அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் ஐபிஎல் போட்டியயை காண்பதற்கு காத்துள்ளார்கள் என்றே கூறலாம்.

இந்த நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் ஐபிஎல் போட்டிக்காக மிகவும் கடுமையாக பயிற்சி செய்து வருகிறார், இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் பவுலர் ஷெல்டன் காட்ரெல் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியது, கேஎல் ராகுல் மிகவும் தனித்துவமானவர்.

மேலும் கிறிஸ் கெயில் மற்றும் நிகோலஸ் பூரன் ஆகியோருடன் இந்த ஐபிஎல் போட்டிகளில் விளையாடவுள்ளார். மேலும் அவருடைய ஆட்டத்தை பார்க்க நான் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

அதனை தொடர்ந்து பேசிய ஷெல்டன் காட்ரெல் இந்திய பௌலர் முகமது ஷமியுடனும் விளையாடுவதில் மிகவும் ஆர்வத்துடன் காத்துள்ளேன் , மேலும் இந்த ஐபிஎல் தொடரில் தான் தன்னுடைய 120 சதவிகித திறமையை காட்டவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்