இந்திய அணியின் பந்து வீச்சை பந்தாடிய ஜானி பேர்ஸ்டோவ்! 338 ரன்கள் இலக்காக வைத்த இங்கிலாந்து !

Published by
murugan

இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியும் ,இந்திய அணியும் மோதி வருகிறது .இப்போட்டி பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்தார் .
இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் , ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடியாக ஜேசன் ராய் , ஜானி பேர்ஸ்டோவ் இருவருமே அடித்தனர்.

இவர்களின் கூட்டணியை பிரிக்க முடியாமல் இந்திய அணி பந்து வீச்சாளர்கள் திணறினர். இவர்களின் கூட்டணியில் அணியின் ரன்கள் வெகுவாக உயர்ந்தது.இந்நிலையில் தொடக்க வீரர்கள்  ஜேசன் ராய் , ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் அரைசத்தை நிறைவு செய்தனர்.
பின்னர் இந்திய அணியின் சுழல் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் வீசிய சுழல் பந்தில் ஜேசன் ராய் 66 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். பிறகு ஜோ ரூட் இறங்கினர்.அதிரடியாக விளையாடி வந்த ஜானி பேர்ஸ்டோவ் 109 பந்தில்  111 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.

அடுத்தாக களமிறங்கிய கேப்டன் மோர்கன் 1 ரன்னில் அவுட் ஆனார்.நிதானமாக விளையாடிய ஜோ ரூட் 44 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் 79 ,ஜோஸ் பட்லர் 20 ,கிறிஸ் வோக்ஸ் 7 ரன்களுடன் வெளியேறினார்.இறுதியாக இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 337 ரன்கள் குவித்தது.
இந்திய அணி பந்து வீச்சில் ஷமி  5 விக்கெட்டை பறித்தார்.338ரன்கள் இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.

Published by
murugan

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

11 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

16 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

16 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

17 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

17 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

17 hours ago