மீண்டும் தனது பழைய பார்முக்கு திரும்பிய ஜோஃப்ரா ஆர்ச்சர், கெட்டதிலும் நல்லதை எடுத்துக்கொள்ளுங்கள் என ட்வீட் செய்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜோஃப்ரா ஆர்ச்சர், ஒருநாள் போட்டியில் தனது சிறந்த பந்துவீச்சை (6-40) தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக பதிவு செய்துள்ளார். இங்கிலாந்து அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று கிம்பர்லே மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா முதலில் பந்து வீச, பேட்டிங் சேட்டை இங்கிலாந்து அணியில், மலான்(118 ரன்கள்) மற்றும் ஜாஸ் பட்லர்(131 ரன்கள்) ஆகியோரின் சதத்துடன் 50 ஓவர்களில் 346/7 ரன்கள் குவித்தது. 347 ரன்கள் வெற்றி இலக்காக களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியை இங்கிலாந்து பவுலர்கள் 50 ஒவர்களும் முழுமையாக விளையாட விடாமல், 287 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தனர். அந்த அணி, 44 ஒவர்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
குறிப்பாக இங்கிலாந்து அணிக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு திரும்பிய ஜோஃப்ரா ஆர்ச்சர், தனது பந்துவீச்சில் மிரட்டி விட்டார். ஒருநாள் போட்டிகளில் தனது முதல் 5+ விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அவர் 9.1 வர்கள் வீசி வெறும் 40 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்களை சாய்த்தார். மேலும் இது அவருக்கு சிறந்த ஒருநாள் போட்டிகளின் பந்துவீச்சாக அமைந்துள்ளது.
இதன் மூலம் தனது பழைய பார்முக்கு திரும்பியிருக்கிறார் ஆர்ச்சர். அவர் இந்த போட்டிக்கு பிறகு தனது ட்வீட்டில் கெட்டதிலும் நல்லதை எடுத்துக்கொள்ளவும் என பதிவிட்டிருக்கிறார். இவர் ஐபிஎல்-இல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடந்த ஆண்டு ஏலத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட்டார், இந்த வருட ஐபிஎல்-இல் எதிரணிக்கு இவர் மிரட்டலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லார்ட்ஸ் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இதற்கு…
சென்னை : மணிமேகலை vs பிரியங்கா இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை, பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், இப்போது…
சென்னை : படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் அஜித் குமார், இன்னொரு பக்கம் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்வதற்கான…
நாமக்கல் : இன்று காலையில் நாமக்கல் குமாரபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் வேகமாக சென்ற கண்டெய்னர் லாரியை…
டெல்லி : நேற்று அரசு முறைப்பயணமாக டெல்லிச் சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று காலை பிரதமர் மோடியை…
சென்னை- நவராத்திரி அன்று அம்பிகைக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நெய்வேத்தியங்கள் படைக்கப்படுகிறது. அதைப்பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் தெரிந்து…