இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் இறங்கிய இந்தியா தனது முதல் இன்னிங்சில் 111.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 345 ரன்கள் எடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 142.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 296 ரன்கள் எடுத்தனர். இந்நிலையில், நியூசிலாந்து அணி வீரர் ரச்சின் ரவீந்திரன் மத்தியில் களமிறங்கி 13 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். இவரது விக்கெட்டை இந்திய வீரர் ஜடேஜா வீழ்த்தினார். இந்த விக்கெட்டை ஜடேஜா வீழ்த்திய பின்னர் இருவரின் ஒற்றுமைகள் குறித்து பல தகவல்கள் இணையத்தளத்தில் வைரலானது.
அதன்படி, இரண்டு வீரர்களும் ஜெர்சி எண் 8 ஐக் கொண்டுள்ளனர். இரண்டு வீரர்களும் இடது கை சுழற்பந்து வீச்சாளர்கள். இருவரின் பெயரிலும் ‘ரவீந்திரன்’ என்ற பெயரும் உள்ளது. மேலும் இரு வீரர்களும் இடது கையால் பேட் செய்கிறார்கள். பல ஒற்றுமைகள் உள்ளது.
மேலும், இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான்களான இந்திய அணியின் தற்போதைய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் சிறந்த பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் முதல் பெயரை சேர்த்து ரச்சின் என்று பெயரிடப்பட்டுள்ளது. ராகுலில் இருந்து ‘ஆர்’ என்ற வார்த்தையையும், சச்சினில் இருந்து ‘சின்’ என்ற வார்த்தையையும் சேர்த்து அவரது முதல் பெயர் உருவாக்கப்பட்டது.
அவரது பெற்றோர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், இருவரும் பல வருடங்களுக்கு முன்பு நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்தனர். ரச்சினின் பெற்றோர் கிரிக்கெட்டை மிகவும் விரும்புகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் இந்திய அணியின் இரண்டு ஜாம்பவான்களின் பெயர்களை இணைத்து தங்கள் மகனுக்கு பெயரிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…
சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…
சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…
கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…
நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…