தோனி இருக்குற வரைக்கும் ஜெயிச்சிட்டோம்னு உறுதியாக கூற முடியாது!! நியூசிலாந்து ஆல் ரவுண்டர்

Default Image

தோனியின் விக்கெட்டை வீழ்த்தும் வரை ஜெயித்துவிட்டோம் என்று எதிரணியர் உறுதியாக கூற முடியாது என்று நியூசிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் ஜிம்மி நிசம் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 4 -வது ஒருநாள் போட்டி ஹாமில்டன் நகரில் நடைபெற்றது.இதில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கியது.

இதன் மூலம்  நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் நாளை கடைசி மற்றும் 5-வது ஒரு நாள் போட்டி நடைபெறுகிறது.இதில் வெற்றிபெற்றால் மட்டுமே இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்ற முடியும்.

இந்நிலையில்  நியூசிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் ஜிம்மி நிசம் தோனி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,இந்திய அணி வீரர் தோனி மிகச்சிறந்த வீரர். அவருடைய திறமைகள் குறித்தும் , உலகக் கோப்பையில் அவரால் விளையாட முடியுமா என்பன போன்ற கேள்விகள் எழுவதை அதிக அளவில் பார்க்க முடிகிறது. அவருடைய சாதனைகளே அவரின் திறமைகள் பற்றி கூறும். தோனியின் விக்கெட்டை வீழ்த்தும் வரை ஜெயித்துவிட்டோம் என்று எதிரணியர் உறுதியாக கூற முடியாது என்று நியூசிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் ஜிம்மி நிசம் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்