ஜஸ்பிரித் பும்ரா இல்லாதது இந்திய அணிக்கு பேரிழப்பு- ஜோஷ் ஹேஸல்வுட்

Default Image

ஜஸ்பிரித் பும்ரா, டி-20 போட்டிகளில் தலை சிறந்த பௌலராக திகழ்ந்து வருகிறார் என்று ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேஸல்வுட் கூறியுள்ளார்.

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டி-20 தொடரின் போது, பயிற்சியில் இருந்த பும்ரா, முதுகு வலி ஏற்பட்டதால் தென் ஆப்பிரிக்க தொடர் மற்றும் டி-20 உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். தற்போது பும்ராவிற்கு பதிலாக உலகக்கோப்பையில் விளையாடும் வீரரை பிசிசிஐ இன்னும் அறிவிக்காத நிலையில் யார் அணியில் சேர்க்கப்படுவார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. மொஹம்மது ஷமி அல்லது மொஹம்மது சிராஜ் இவர்களில் ஒருவர் பும்ராவிற்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நம்பர் 1 டி-20 பௌலரான ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேஸல்வுட் இந்திய அணியின் பும்ரா தற்போது உலகின் தலைசிறந்த டி-20 பௌளராக திகழ்ந்து வருகிறார். டெத் ஓவர்களில் அதிக யார்க்கர்கள் வீசி பேட்ஸ்மேன்களுக்கு சிரமத்தை கொடுப்பவர். டி-20 உலகக்கோப்பையில் அவர் இல்லாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்றும் ஹேஸல்வுட் மேலும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்