இதெல்லாம் விளையாட்டில் சகஜம்.! ருதுராஜிடம் மன்னிப்பு கேட்ட ஜெய்ஸ்வால்.!

Published by
மணிகண்டன்

சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா அணியுடன் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் கடைசியாக முடிந்த இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இதில் முதல் டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் விளையாடுகையில் , தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். அப்போது முதல் ஓவரில் ருதுராஜ் கெய்க்வாட் ஒரு ரன்னிற்கு அழைக்க அப்போது ஜெய்ஸ்வால் அதனை மறுத்து இருப்பார் . அதனால் ஒரு பந்தை கூட சந்திக்காமல் ருதுராஜ் ரன்அவுட் செய்யப்பட்டு வெளியேறி இருப்பார்.

ஐபிஎல் அதிரடிகள்.! மும்பை சென்ற ஹர்திக் பாண்டியா..! கேப்டனாக மாறிய சுப்மன் கில்.!

இதனை தொடர்ந்து நேற்று இரண்டாவது டி20 ஆட்டம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அப்போது இதே ஜோடி மீண்டும் களமிறங்கியது. இதில்  ஜெய்ஸ்வால் ஒரு பக்கம் அதிரடி காட்டி ஆடி 25 பந்துகளில் 53 ரன்கள் விளாசினார். ருதுராஜ் இறுதி வரை நிதானமாக விளையாடி 43 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து இருந்தார். இந்திய அணி வெற்றி பெற்றது. ருதுராஜ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்ஸ்வால் முந்தைய போட்டியில் நிகழ்ந்த ரன் அவுட் பற்றி பேசினார். அப்போது, முந்தைய டி20 போட்டியில் நடந்த ரன் அவுட் என்னுடைய தவறு தான். அதற்காக நான் அப்போதே அவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டேன். அவர் என்னை ரன் ஓட அழைத்தார். நான் தான் மறுத்துவிட்டேன். ஆனால் அதனை ருது பாய் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை . விளையாட்டில் இது போல நடக்கும் சகஜம் தான்  என கூறினார். ருது பாய் மிகவும் அன்பானவர் அக்கறையுள்ளவர் என கூறினார்.

மேலும், கேப்டன் சூர்யா பாயும், பயிற்சியாளர் விவிஎஸ் லக்ஷ்மணனும் என்னை  சுதந்திரமாக என்னுடைய விளையாட்டை விளையாட கூறினர். அதனால் நான் இன்று சுதந்திரமாக விளையாடினேன் என நேற்று அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் கூறினார்.

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

13 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

13 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

13 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

13 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

14 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

14 hours ago