இந்திய, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்டை தொடர்ந்து, ஜடேஜாவும் காயத்தால் வெளியேறினார்.
இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 3-வது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் சிட்னி மைதானத்தில் தொடங்கியது. முதலில் இறங்கிய ஆஸ்திரேலிய அணி 105.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 338 ரன்கள் எடுத்தனர். இதைத்தொடர்ந்து , இறங்கிய இந்திய அணி 100.4 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 244 ரன்கள் எடுத்தனர்.
இந்நிலையில், இந்திய அணியின் ஆல்ரவுண்டர் பேட்டிங்கின் போது ரவீந்திர ஜடேஜாவின் இடது கட்டைவிரலில் பந்து தாக்கி காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, ரவீந்திர ஜடேஜா ஸ்கேன் செய்வதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என பிசிசி ஐ தெரிவித்துள்ளது. முதல் இன்னிங்ஸில் ரவீந்திர ஜடேஜா 28* ரன்கள் எடுத்து கடைசிவரை நின்றார்.
இதற்கு முன் இந்திய அணி விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் பேட்டிங்கின் போது பந்து தாக்கியதில் இடதுகையில் காயம் ஏற்பட்டது. ரிஷப் பண்ட் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து ஸ்கேன் செய்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ரிஷப் பண்ட் முதல் இன்னிங்ஸில் 36 ரன் எடுத்த நிலையில் ஹேசில்வுட் பந்துவீச்சில் வார்னரிடம் ஆட்டம் இழந்தார்.
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை…
டெல்லி : உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…