நேற்றைய போட்டியில் 4 கேட்ச்களை பிடித்த ஜடேஜா, தனது கைகளால் 4 என்று செய்கை காட்டி, “ஹலோ, துபாய் ஆ” என்பதை போல புதிய ஸ்டைலில் ஆக்ஷன் செய்தார்.
ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய சென்னை அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தனர். 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 143 ரன்கள் எடுத்து 45 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதன்மூலம் ஐபிஎல் தொடரில் தனது இரண்டாம் வெற்றியை பதிவு செய்தது, சென்னை அணி.
இந்த போட்டியில் சென்னை அணியின் ஜடேஜா, 2 விக்கெட்களை வீழ்த்தியது மட்டுமல்லாமல், 4 கேட்ச்களையும் பிடித்து அசத்தினார். அவர் ராஜஸ்தான் அணி வீரர்களான மனன் வோரா, ரியான் பராக், கிறிஸ் மோரிஸ், ஜெயதேவ் உனட்கட் ஆகியோர்களின் கேட்ச்களை பிடித்து அசத்தினார். இதில் சுவாரசியம் என்னவென்றால், ரியான் பராக் அடித்த பந்தை கேட்சை பிடித்த ஜடேஜா, பந்தை எல்லைக்கோட்டில் வைப்பது போல் பாவளை செய்தார்.
மேலும், கடைசியாக உனட்கட் கேட்சை பிடித்த ஜடேஜா, தனது கைகளால் 4 என்று செய்கை காட்டி, “ஹலோ, துபாய் ஆ” என்பதை போல புதிய ஸ்டைலில் ஆக்ஷன் செய்தார். இதுதொடர்பான விடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகு வருகின்றது. அதுமட்டுமின்றி, இந்த சீஸனின் மைதானத்தில் எங்குபார்த்தாலும் ஜடேஜா நிற்கிறார். அவரின் கைகளை விட்டு பந்து எங்கும் செல்லவில்லை.
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் [செப்டம்பர் 30] முத்துவின் செல்லை வாங்கி சத்யா பற்றிய வீடியோவை வெளியிட…
கான்பூர் : இந்திய மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் 4-வது நாள் ஆட்டம் இன்று…
சென்னை : குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்சி ஒரு பக்கம் கலகலப்பாகவும், மற்றொரு பக்கம் சர்ச்சையில் சிக்கி…
சென்னை : தமிழக அரசியலில் பலரும் எதிர்பார்த்து காத்திருந்த 'துணை முதலமைச்சர்' பதவி குறித்த கேள்விக்கு நேற்று முன்தினம் பதில்…
சென்னை : வாரத்தின் முதல் நாளான இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. தொடர்ந்து தங்கம் விலை…
கான்பூர் : வங்கதேச அணி இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின்…