#BigBreaking:சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஜடேஜா நியமனம்!

Default Image

ஐபிஎல் 2022 க்கான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) கேப்டன் பதவியை ரவீந்திர ஜடேஜாவிடம் முன்னாள் இந்திய கேப்டன் எம்எஸ் தோனி ஒப்படைத்துள்ளார்.

ஐபிஎல்:சிஎஸ்கே அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் எம்எஸ்.தோனி க்கு பதிலாக புதிய கேப்டனாக ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.ஐபிஎல் தொடங்கியது முதல் கேப்டனாக இருந்து வரும் தோனி தனது கேப்டன் பொறுப்பை ரவீந்திர ஜடேஜாவுக்கு ஒப்படைத்துள்ளார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அதிகாரப்பூர்வ ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

எம்எஸ் தோனி தனக்கான தனி வரலாற்றுக்கு சொந்தக்காரர், அவர்  யாராலும் அடைய முடியாத நம்பமுடியாத கடினமான பாதைகளை கடந்து வந்துள்ளார். சிஎஸ்கே கேப்டனாக 12 சீசன்கள், 9 இறுதிப் போட்டிகள் மற்றும் 4 கோப்பைகளை வென்றுள்ளார்.

2008ல் லீக் தொடங்கியதில் இருந்து சிஎஸ்கே கேப்டனாக இருந்த தோனி, நடக்கவிருக்கும்  சீசன் தனது கடைசி ஐபிஎல் போட்டியாக இருக்கலாம் அதற்கான முடிவாக இருக்கும் என பார்க்கப்படுகிறது.தோனி ஏற்கனவே அனைத்து விதமான  சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்.

“கடந்த சில ஆண்டுகளாக ரவீந்திர ஜடேஜா ஒரு  சிறந்த அனுபவாய்ந்த வீரராகவும்  முதிர்ச்சியடைந்த விதம்,இக்கட்டான சூழ்நிலையில் ஆட்டத்தை மாற்றி அமைக்கும் விதம் சிறந்தவராக  பார்க்கப்படுகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்