Pat Cummins with his mother [file image]
பேட் கம்மின்ஸ் : ஹைதரபாத் அணியின் கேப்டனான பேட் கம்மினிஸ் தனது அம்மா அவரிடம் சொன்ன வார்த்தைகளை தற்போது தி டெஸ்ட் சீசன் தொடரில் பகிர்ந்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணியின் புதிய கேப்டனான பேட் கம்மின்ஸ் இந்த தொடரில் தனது அணியை சிறப்பாக வழிநடத்தி சென்று கொண்டிருக்கிறார். அதற்கு உதாரணம் தான் 8 வருடங்கள் இறுதி போட்டிக்கு தகுதி பெறாமல் இருந்த ஹைதராபாத் அணியை இந்த தொடரில் இறுதி போட்டிக்கு கொண்டு சென்றுருக்கிறார்.
எந்த நேரத்தில் எந்த பவுலரை பந்து வீச வைக்க வேண்டும், எந்த இடத்தில் சரியாக ஃபீலடிங் நிற்க வைக்க வேண்டும் என ஐபிஎல் தொடரில் மற்ற அணிக்கு கேப்டனாக செயல்படும் இந்திய வீரர்களுக்கு இவர் ஒரு எடுத்துக்கட்டாகவே இருக்கிறார். தற்போது, அமேசான் ப்ரைமில் வெளியாகி இருந்த தி டெஸ்ட் சீசன் 3ல் (The Test Season 3) பேட் கம்மின்ஸ் தனது வாழ்க்கையில் அவரது அம்மா அவரிடம் சொன்ன எமோஷனல் கலந்த வார்த்தைகளை அதில் பகிர்ந்திருப்பர்.
அதை ரசிகர்கள் தற்போது இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். அவரது அம்மா அவரிடம் கூறியதாவது, “போ.. இந்த உலகத்தை எதிர்கொள்.. யாரோ ஒருவர் இந்த உலகத்தில் அற்புதமான சில விஷயங்களை செய்யப் போகிறார்கள்.. அது ஏன் நீயாக இருக்கக் கூடாது” என கூறி இருக்கிறார். மேலும், அந்த வார்த்தை என்னை இந்த அளவுக்கு உயர்த்திருக்கிறது என பேட் கம்மின்ஸ் அந்த வீடியோவில் பகிர்ந்திருப்பார்.
தற்போது, இந்த நாட்களில் பேட் கம்மின்ஸ் தாயின் வார்த்தைகளை கம்மின்ஸ் கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற்றி வருகிறார். இதற்கு முன் இந்திய அணியை உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் வென்று கோப்பையை தட்டி தூக்கி இருந்தார். அதன் பின் 50 ஓவர் உலகக்கோப்பையிலும் கேப்டனாக சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார்.
மேலும், டி20 உலகக்கோப்பை வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றிருந்தார். தற்போது உலகின் சிறந்த டி20 லீக் தொடரில் கேப்டனாக கம்மின்ஸ் களமிறங்கி முதல் சீசனிலேயே இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். இப்படி தொடர்ந்து சாதனைகளை குவித்து வருவதை பார்க்கையில் தனது தாய் சொன்ன வார்த்தைகளை மகன் பேட் கம்மின்ஸ் ஒரு நல்ல மகனாக நிறைவேற்றி வருகிறார் என இணையத்தில் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
மும்பை : லக்னோ மற்றும் மும்பை அணிகள் மாலை 3:30 மணிக்கும், டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் இரவு 7:30…
கோவை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் உள்ள குரும்பபாளையத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில் ஏப்ரல்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தனது 121-வது மன் கி பாத் (Mann Ki Baat) உரையில், மியான்மரில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள், குற்றவாளிகள் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பஹல்காமில்…
காஷ்மீர் : பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. ஸ்ரீநகரில் நேற்று (சனிக்கிழமை) 60க்கும்…
கேரளா : சமீபத்தில் ஹிட்டான 'ஆலப்புழா ஜிம்கானா', 'தள்ளுமாலா' படங்களின் இயக்குநர் காலித் ரகுமான் உள்பட மூவர் போதைப்பொருள் வழக்கில்…