சூர்யகுமார் யாதவ் ரன்கள் அடிக்க தவறினால் இந்தியா 140-150 ரன்கள் அடிப்பது கஷ்டம் தான் என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.
டி-20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டிகள் நாளை தொடங்குகிறது. முதல் அரையிறுதியில் பாக். அணி நியூசிலாந்தை எதிர்த்து விளையாடுகிறது. இரண்டாவது அரையிறுதியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
இங்கிலாந்திற்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் சூர்யகுமார் யாதவ் ரன்கள் அடிக்க வில்லையெனில் இந்தியா, நிச்சயம் 140 – 150 ரன்கள் அடிக்க திணறும் என்று கவாஸ்கர் கூறியுள்ளார். ஜிம்பாப்வேவிற்கு எதிரான போட்டியில் சூர்யகுமார் மட்டும் 61*ரன்கள்(25 பந்துகளில்) அடிக்காமல் இருந்திருந்தால் இந்தியா 150 ரன்களைக் கடந்திருக்காது.
தற்போது சூர்யகுமார் இருக்கும் ஃபார்முக்கு அவர் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும் சிறப்பாக விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகின்றனர். அவரை தற்போதைய “மிஸ்டர் 360 டிகிரி” என்றே கூறலாம். தற்போது இந்தியாவில் சூர்யகுமார், கோலி மற்றும் ராகுல் நல்ல ஃபார்மில் இருக்கின்றனர்.
ஒருவேளை இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சூர்யகுமார் ரன்கள் அடிக்கவில்லையெனில் ராகுல் அந்த இடத்தில் பொறுப்பேற்று விளையாட வேண்டும் என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…