Pakistan [Image source : file image ]
ஐசிசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் 4-வது ஒரு நாள் போட்டியின் வெற்றிக்குப் பிறகு, வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தான் நம்பர் 1 இடத்தை பிடித்தது. ஆனால் தரவரிசையில் அவர்களால் 2 நாட்கள் மட்டுமே இருக்க முடிந்தது.
ஏனென்றால், நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் 47 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 299 ரன்கள் எடுத்தனர். அடுத்ததாக, 300 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 46.1 ஓவர்களில் 252 ரன்களில் அணைத்து விக்கெட்களையும் இழந்தது.
எனவே, நியூசிலாந்து 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியை மட்டும் தழுவியது மட்டுமின்றி, தரவரிசை பட்டியலில் நம்பர் 1 இடத்தில இருந்து தற்போது 3-வது இடத்திற்கு சென்று உள்ளது. இதனால் பாகிஸ்தான் அணியின் ரேட்டிங் 112-ஆக குறைந்துள்ளது,
மேலும், ஐசிசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்திற்கு சென்றுள்ளது. அதைப்போல, இந்தியா அணி 113 ரேட்டிங் உடன் 2-வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…