இஷான் பொரல், சந்தீப் வாரியர், அர்ஷ்தீப் சிங், சாய் கிஷோர், சிமர்ஜீத் சிங் ஆகிய 5 வலை பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் இணைந்துள்ளனர்.
க்ருனல் பாண்டியாவிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில்,நேற்று நடைபெற இருந்த 2-வது டி20 போட்டி இன்று நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில், பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில், இலங்கையில் உள்ள இந்திய அணி நிர்வாகத்தின் வேண்டுகோளின் அடிப்படையில், அகில இந்திய மூத்த தேர்வுக் குழு 2-வது மற்றும் 3-வது டி 20 போட்டிகளுக்கான இந்திய அணி புதிய வீரர்களின் பெயர் வெளிப்பட்டுள்ளது.
அதில், இஷான் பொரல், சந்தீப் வாரியர், அர்ஷ்தீப் சிங், சாய் கிஷோர், சிமர்ஜீத் சிங் ஆகிய 5 வலை பந்துவீச்சாளர்கள் மீதமுள்ள டி20 போட்டிகளுக்கான அணியில் ஒரு பகுதியாக இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 27 ஆம் தேதி க்ருனல் பாண்டியாவிற்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட பின்னர், அணியின் அனைத்து வீரர்களுக்கும், உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கையாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
க்ருனல் பாண்டியாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த எட்டு உட்பட உட்பட அனைவருக்கும் சோதனை முடிவுகள் நெகடிவ் என வந்ததுள்ளது. இருப்பினும், உடல்நலம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக க்ருனல் பாண்டியாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 8 பேர் ஹோட்டலில் தொடர்ந்து தனிமையில் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…