ஸ்டிக்கை தெறிக்கவிட்ட இஷாந்த் ஷர்மா..! கீழே விழுந்தும் ரஸ்ஸல் செய்த நெகிழ்ச்சி செயல் !

Published by
அகில் R

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் அதிரடி காட்டி கொண்டிருந்த ரஸ்ஸல் விக்கெட்டை இஷாந்த் சர்மா எடுத்த போது, ரஸ்ஸல் செய்த நெகிழ்ச்சியான சம்பவம் இணையத்தில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது.

நடந்து கொண்டிருக்கும் இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணியும், டெல்லி அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. தொடக்க வீரராக களமிறங்கிய சுனில் நரேன் மிக சிறப்பாக டெல்லி அணியின் பவுலர்களை அடித்து பறக்கவிட்டார் அதிரடி காட்டிய அவர் 39 பந்துகளில் 85 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அவரை தொடர்ந்து இளம் வீரர் ரகுவன்ஷி களமிறங்கி அதிரடி காட்டி அரை சத்தை கடந்து 27 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின் களமிறங்கிய ஆன்ட்ரே ரஸ்ஸல் ஆக்ரோஷமான தனது ஆட்டத்தை வெளிக்காட்டினார். ஏற்கனவே, 12.3 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 160 ரன்கள் கடந்து இருந்த நிலையில் களமிறங்கிய ரஸ்ஸல் டெல்லி அணி வீசிய அனைத்து பந்துகளையும் சிக்ஸர், பவுண்டரிகள் பறக்க விட்டார்.

அவரது ருத்ர தாண்டவத்தால் கொல்கத்தா அணியின் ஸ்கோர் 200 ரன்களை கடந்து உச்சம் பெற்றது.  இந்நிலையில், இறுதி ஓவரை டெல்லி அணியின் இஷாந்த் சர்மா வீசினார்.  அவரது பந்தை எதிர்கொள்ள ரஸ்ஸல் நின்று கொண்டிருந்தார், இஷாந்த் சர்மா வீசிய அந்த ஓவரின் முதல் பந்தானது ஸ்டம்பை தெறிக்கவிட்டது.

ஒரு நல்ல யார்கள் பந்தை இஷாந்த் சர்மா வீசியதால் அந்த பந்தை எதிர் கொள்ள முடியாமல் ரஸ்ஸல் தடுமாறி கீழ விழுந்தார், அந்த பந்து 3 ஸ்டிக்கையும் தெறிக்க விட்டது. இதனால் ஆக்ரோஷமாக விளையாடி கொண்டிருந்த ரஸ்ஸல் 19 பந்துகளில் 41 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தான் கீழே விழுந்தும் போல்டான பிறகும் எழுந்து நின்று அவர் வீசிய பந்தை கை தட்டி பாராட்டி பெவிலியன் திரும்பினார்.

இது பார்ப்போர் அனைவரையும் மனம் நெகிழ வைத்ததுடன், கிரிக்கெட் ரசிகர்கள் இந்த வீடியோவை வைரலாக்கி ஒரு நல்ல ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பை கொண்ட ரஸ்ஸலையும் பாராட்டி வருகின்றனர். இது போல ஸ்போர்ட்ஸ்மென்ஷிப் இவர்களை பார்த்து வளர்ந்து வரும் இளைஞர்களுக்கு ஒரு பாடமாகவும் அவர்களை ஊக்கிவிக்கும் வகையிலும் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

ஐபிஎல் 2025 : கேப்டன் பொறுப்பிலிருந்து வெளியேறுகிறார் ‘ரிஷப் பண்ட்’? காரணம் இதுதான்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…

21 mins ago

துலாபார வழிபாடும் அதன் பலன்களும் ..!

சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…

25 mins ago

ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்.! தவெக தொண்டர்களுக்கு அரசியல் பயிலகம் தொடக்கம்…

சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…

39 mins ago

கிடு கிடு உயர்வு! 58,000-த்தை நெருங்கும் தங்கம் விலை!

சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…

51 mins ago

பருப்பு விவகாரம்., “பாஜகவின் ஆதாரமற்ற குற்றசாட்டு.!” தமிழக அரசு வெளியிட்ட விளக்க அறிக்கை..,

சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…

1 hour ago

IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!

பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…

2 hours ago