Team Pakistan [file image]
டி20I: 2024 ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை தொடரில் ‘A’ பிரிவில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான் அணி தொடர்ந்து 2 போட்டிகளில் தோல்வியை தழுவி இருப்பது அந்த அணி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தற்போது, பாகிஸ்தான் அணி அடுத்த சுற்றான சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு இந்திய அணியின் உதவி தேவைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதாவது, ‘A’ பிரிவில் இந்தியா அணி தற்போது 2 வெற்றிகளை பெற்று 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அதே நேரம் அமெரிக்கா அணியும் 2 வெற்றிகளை பெற்று 4 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருந்து வருகிறது. அவர்களை தொடர்ந்து கனடா அணி ஒரு வெற்றியை பெற்று 2 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருந்து வருகிறது.
மேலும், எந்த வெற்றியும் பெறாமல் பாகிஸ்தான் அணியும், அயர்லாந்து அணியும் 4-வது மற்றும் 5-வது இடத்தில் இருந்து வருகிறது. இனி பாகிஸ்தான் அணிக்கு அயர்லாந்து அணியுடனும், கனடா அணியுடனும் போட்டி இருக்கிறது. இந்த 2 போட்டியையும் பெரிய ரன்கள் அடிப்படையில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற வேண்டும்.
மேலும், அதே நேரம் அமெரிக்கா அணி, கனடா அணி இரு அணிகளும் மீதம் விளையாடும் 2 போட்டிகளையும் பெரிய ரன்கள் அடிப்படையில் தோற்க வேண்டும். இதனால் பாகிஸ்தான் அணி ரன்ரேட் அடிப்படையில் முன்னிலை வகிப்பார்கள். இதனால், இந்தியா அணி மீதம் கனடா அணியுடனும், அமெரிக்கா அணியுடனும் விளையாடவுள்ள போட்டியை பெரிதளவில் வெற்றி பெற வேண்டும் என பாகிஸ்தான் அணி ரசிகர்கள் இப்போதே எதிர்பார்க்க தொடங்கிவிட்டனர்.
ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு…
டெல்லி : நேற்று ( ஏப்ரல் 22) காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம்…
புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…
டெல்லி : நேற்று (ஏப்ரல் 22) பிற்பகல் 3 மணியளவில் ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில், பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில்…