தள்ளி போகிறதா அந்த ஐபிஎல் போட்டி ..? என்ன காரணம் தெரியுமா ?

Published by
அகில் R

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் ஏப்ரல்-17 ம் தேதி நடைபெறும் 32-வது போட்டியான கொல்கத்தா அணியும், ராஜஸ்தான் அணியும் மோதும் போட்டி தற்போது தள்ளி போக உள்ளதாக தகவல்கள் வருகிறது.

ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் -22 ம் தேதி தொடங்கி தற்போது கோலாகலமாக நடைபெறுகிறது. நடப்பு ஐபிஎல் தொடரின் 32-வது போட்டியாக நடைபெற உள்ள போட்டி தான் கொல்கத்தா அணியும், ராஜஸ்தான் அணியும் மோதவுள்ள போட்டியாகும். இந்த போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7.30 மணி ஆட்டமாக நடைபெறுகிறது.

இந்த போட்டியானது தற்போது குறிப்பிட்ட தேதியான ஏப்ரல்-17 ம் தேதி அன்று நடைபெறும் என்று அறிவித்திருந்தது. தற்போது, அந்த போட்டியானது ஒத்தி வைக்க போவதாக சில தகவல்கள் வெளியாகிறது. வருகிற ஏப்ரல் – 17ம் தேதி அன்று ‘ராமநவமி’ (ராமரின் பிறந்த நாள்) என்னும் திருவிழா வருவதால் நாடு முழுவதும் உள்ள ஹிந்துக்கள் அதனை கொண்டாடுவார்கள்.

மேலும், குறிப்பாக கொல்கத்தாவில் உள்ள மக்கள் அன்று இரவு அதனை சிறப்பாக கொண்டாடுவார்கள் என்ற காரணத்தால் அங்கு போக்குவரத்து பாதிக்கும் என்பதை கருத்தில் கொண்டு கொல்கத்தா போலீசார் பிசிசிஐயிடம் அன்று நடைபெறும் போட்டியை ஒத்திவைக்கமாறு சில பேச்சு வார்த்தைகளில் ஈடுப்பட்டு வருவதாக சில தகவல்கள் கசிந்து உள்ளது.

இதனை கருத்தில் கொண்டும் மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் நடைபெறும் காரணத்தாலும் தற்போது பிசிசிஐ ஏப்ரல்-17 ம் தேதி நடைபெறும் போட்டியை ஒத்திவைக்கலாமா என்று பேச்சு வார்த்தையில் ஈடு பட்டு வருவதாகவும் சில ஊடகங்களின் மூலம் தகவல்கள் தெரிகிறது. இதனால், அன்று நடைபெறும் போட்டியை மாற்றி வேறொரு நாள் நடத்தலாம் என்று தெரிகிறது, எதுவாக இருந்தாலும் கூடிய விரைவில் பிசிசிஐ இதற்கான அதிகார பூர்வ முடிவை எடுத்தால் மட்டுமே என்னவென்று தெரியவரும்.

Published by
அகில் R

Recent Posts

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…

13 hours ago

“ஓட்டு மட்டுமே குறிக்கோள் இல்லை., மக்களோடு பேசுங்கள்!” விஜய் கொடுத்த ‘குட்டி’ அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

13 hours ago

ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து! 300க்கும் மேற்பட்டோர் காயம்!

தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…

14 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் சிறிய தீ விபத்து? “ஒதுங்கி நில்லுங்கள்!” விஜய் அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…

15 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு.., என்ன பேசப்போகிறார் விஜய்?

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…

15 hours ago

கட்டாய கடன் வசூல்., 3 ஆண்டுகள் சிறை! புதிய சட்ட மசோதா விவரங்கள் இதோ…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…

18 hours ago