அவர் கூறியதை படித்தவுடன் சிரித்துவிடுங்கள் -பாகிஸ்தான் வீரருக்கு இந்திய வீரர் பதிலடி

Published by
Venu
  • இந்திய அணி வீரர் பும்ராவை குழந்தை பந்துவீச்சாளர் என்று அப்துல் ரசாக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
  • அப்துல் கூறியதை எல்லாம் படித்து விட்டு சிரித்து விடுங்கள் என்று இர்பான் பதான்  தெரிவித்துள்ளார்.

பும்ரா ஒரு பேபி பவுலர் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல் -ரவுண்டர் அப்துல் ரசாக் கூறினார்.மேலும் நான் விளையாடிய காலகட்டத்தில் பலவிதமான ஜாம்பவான் பந்துவீச்சாளர்களை  எதிர்கொண்டுள்ளேன். ஆனால் பும்ராவின் பந்துவீச்சை மிகவும் எளிமையாக எதிர்கொள்வேன் என்று கருத்து கூறினார்.இவர் இவ்வாறு கூறியது இந்திய ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இதனால் இந்திய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அப்துலை  கடுமையாக விமர்சித்தனர்.

மேலும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி குறித்து அவர் கூறுகையில்,  விராட் கோலி மட்டும் சச்சினை போல நல்ல மதிப்பெண்களை பெற்றுவருகிறார்.ஆனால்  விராட் கோலியை சச்சினுடன் ஒப்பிட வேண்டாம் என்றும் சச்சின் வேறு ,கோலி வேறு என்றும் தெரிவித்தார்.இந்த கருத்து மேலும் இந்திய ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில்  பும்ராவை குறிவைத்து கூறியதற்கு இந்திய அணியின் ஆல் -ரவுண்டராக ஜொலித்த இர்பான் பதான்  தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், இந்திய ரசிகர்களே இம்மாதிரியான கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள் .இந்த கருத்தை ஒதுக்குங்கள் . இவற்றை எல்லாம் படித்து விட்டு சிரித்து விடுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

Published by
Venu

Recent Posts

தூத்துக்குடி, கன்னியாகுமரி உட்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

தூத்துக்குடி, கன்னியாகுமரி உட்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக நேற்று சில மாட்டவங்களில் மழை…

47 minutes ago

ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்…அவசரமாக இந்தியா திரும்பிய பிரதமர் மோடி!

ஸ்ரீநகர் :  நேற்று (ஏப்ரல் 22) உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில்…

1 hour ago

கைவிட்ட அணியை கதறவிட்ட கே.எல்.ராகுல்! ஷாக்கான லக்னோ உரிமையாளர்?

லக்னோ : கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக கேப்டனாக விளையாடிய கே.எல்.ராகுல் சில போட்டிகளில் அணி தோல்வி அடைந்த காரணத்தால் உரிமையாளரிடம்…

1 hour ago

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்….தற்போதைய நிலை என்ன?

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர், ஆனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 அன்று மாலை தீவிரவாதிகள்…

2 hours ago

LSG vs DC : லக்னோவை பந்தாடிய டெல்லி கேபிட்டல்ஸ்! 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…

9 hours ago

LSG vs DC : அதிரடி காட்டிய லக்னோ! இறுதியில் சுருட்டிய டெல்லி! இதுதான் டார்கெட்!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…

11 hours ago