ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்களை தேர்தெடுப்பதற்கான ஏலம் சென்னையில் நாளை மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது.
2021-ஆம் ஆண்டிற்கான 14வது ஐபிஎல் தொடர் இன்னும் ஒரு சில மாதங்களில் தொடங்கவுள்ளது. இதில் பங்கேற்கும் அணிகள் வீர்ரகளை தேர்தெடுப்பதற்கான ஏலம் சென்னையில் முதல் முறையாக நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் 164 இந்திய வீரர்கள் உட்பட மொத்தம் 292 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இதில் ஹர்பஜன் சிங், கேதார் ஜாதவ் ஆகிய 2 இந்திய வீரர்களுக்கு அடிப்படையிலை ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவர்களை தவிர மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், ஷகிப் அல் ஹசன், மொயின் அலி, சாம் பில்லிங்ஸ், ஜேஸன் ராய் உள்ளிட்ட 7 வெளிநாட்டு வீரர்களுக்கு அடிப்படை விலை ரூ.2 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் ஏலத்தில் 8 தமிழக வீரர்களும் போட்டியில் உள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புடன் நடைபெறும் இந்த ஏலம் நாளை மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 6 வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம். இதில் ஒருவர் வெளிநாட்டு வீரராக இருக்கலாம். கைவசம் ரூ.19.90 கோடி உள்ளது.
மேலும், டெல்லி கேப்பிட்டல்ஸ் இடம் ரூ.13.4 கோடி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் ரூ.53.20 கோடி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ.10.75 கோடி, மும்பை இந்தியன்ஸ் ரூ.15.35 கோடி, ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.37.85 கோடி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ரூ.35.40 கோடி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் ரூ.10.75 கோடி கைவசம் உள்ளது.
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு…
டெல்லி : நேற்று ( ஏப்ரல் 22) காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம்…
புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…