#IPLAuction: ஐபிஎல் ஏலத்தில் டை-பிரேக்கர் விதி! விவரம் உள்ளே.!

Default Image

ஐபிஎல் 2023க்கான மினி ஏலத்தில் டை-பிரேக்கர் விதியை பிசிசிஐ மீண்டும் அறிமுகப்படுத்துகிறது.

அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் 2023க்கான மினி ஏலம் இன்று பிற்பகல் கொச்சியில் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் 273 இந்திய வீரர்கள் மற்றும் 132 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 405 பேர் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு அணிகளின் இருப்புத்தொகையை கூடுதலாக 5 கோடி அதிகரித்து 95 கோடியாக்கியுள்ளது.

இருப்பினும் சில அணிகளுக்கான மொத்த இருப்புத்தொகை குறைவாக இருப்பதால் அணிகளுக்கிடையே பணப்பற்றாக்குறையால் வீரர்களை வாங்கமுடியாமலும் போகலாம். ஒருவேளை 2(அ) மேற்பட்ட அணிகள் தங்களிடம் இருக்கின்ற தொகை முடிகின்ற சமயத்தில் மேற்கொண்டு ஏலத்தை தொடர முடியாமல் போனால், டை-பிரேக்கர் விதி பின்பற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிப்படி ஏலத்தில் கடைசியாக கேட்கப்பட்ட தொகைக்கே அந்த வீரர் விற்கப்படுவார், ஆனால் எலாம் கேட்கப்பட்ட அணிகளில் எந்த அணி வாங்கும் என்பதை  இந்த டை-பிரேக்கர் விதி முடிவு செய்யும். ஒவ்வொரு அணியும், எழுத்து முறையில் வீரருக்கான அதிபட்ச ஏலத்தொகையை சமர்ப்பிக்க வேண்டும், எந்த அணியின் தொகை அதிகமாக உள்ளதோ அந்த அணிக்கே வீரர் கடைசி ஏலத்தொகைக்கு விற்கப்படுவார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்