ஐபிஎல் தொடரின் 8-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலபரீட்சை.
ஐபிஎல் தொடரின் 15வது சீசன் கடந்த 26ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிராவில் உள்ள மூன்று மைதானங்களில் மொத்தம் 70 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதுவரை 7 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இன்று 8-வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலபரீட்சை நடத்துகின்றன. இந்த சீசனின் முதல் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி, ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோற்கடித்தது.
ஆனால், 2வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா தோல்வியை சந்தித்தது. மறுபுறம் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் அணி முதல் போட்டியில் பெங்களூரு அணியை தோற்கடித்து. இன்று தனது இரண்டாவது ஆட்டத்தில் கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது. எனவே, கொல்கத்தா அணி ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடனும், பஞ்சாப் அணி விளையாடிய ஒரு போட்டியில் வெற்றியுடன் கொல்கத்தா அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் நிலவரம் மற்றும் ஒரே நாடு…
சென்னை : நேற்று தூத்துக்குடி சிதம்பர நகா் பேருந்து நிறுத்தம் அருகே தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலரும், அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில்…
சென்னை : வெற்றிமாறன் எடுத்த படங்களில் தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய சினிமாவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் வடசென்னை…
டெல்லி : நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. ஏற்கனவே, முதற்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர்…
ஒட்டாவா : கனடாவின் லிபரல் கட்சி மக்களின் பெரிய ஆதரவுடன், மார்க் கார்னியை (59) நாட்டின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுத்துள்ளது. கடந்த…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி 2025-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ள நிலையில், இந்திய ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.…