#IPL2022: ஐபிஎல் ரசிகர்களுக்கு நற்செய்தி! – மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

நடப்பாண்டு ஐபிஎல் போட்டிகளை காண 50 சதவீதம் பார்வையாளர்களுக்கு மகாராஷ்டிரா அரசு அனுமதி.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 15-ஆவது சீசன் கடந்த 26-ஆம் தேதி தொடங்கிய நிலையில், 10 அணிகளும் போட்டிபோட்டு கொண்டு விளையாடி வருகிறது. இறுதிப் போட்டி மே 29 ஆம் தேதி நடைபெறும் என்று பிசிசிஐ ஏற்கனவே அறிவித்திருந்தது. மகாராஷ்டிராவை அடிப்படையாக கொண்ட மும்பை மற்றும் புனேவில் உள்ள நான்கு சர்வதேச மைதானங்களில் மொத்தம் 70 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. பிளே-ஆஃப் போட்டிகள் நடைபெறும் இடம் பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, ஐபிஎல் 2022 போட்டியைக் காண மைதானங்களில் 25 சதவீதம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர் என பிசிசிஐ மற்றும் மகாராஷ்டிரா அரசு இடையே நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு, ஐபிஎல் முதல் கட்டத்திற்கு 25 சதவீதம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டது. அதன்படி, ஐபிஎல் போட்டிகள் 25% பார்வையாளர்களுடன் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ஐபிஎல் போட்டிகளை காண 50 சதவீதம் பார்வையாளர்களுக்கு மகாராஷ்டிரா அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா காரணமாக 25% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கிய நிலையில், தற்போது 50% அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, கொரோனா குறைந்து வருவதால், 1ம் தேதி முதல் கட்டுப்பாடுகளில் முழு தளர்வுகள் அளிக்கவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதனடிப்படையில் 50% பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

26 mins ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

44 mins ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

56 mins ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

60 mins ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

2 hours ago

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…

2 hours ago