#IPL2022: மோடி மைதானத்தில் இறுதிப்போட்டி? – வெளியான லேட்டஸ்ட் தகவல்!

Default Image

ஐபிஎல் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளதாக தகவல்.

நடப்பாண்டு 15-வது சீசன் ஐபிஎல் தொடர் பார்வையாளர்கள் அனுமதியுடன் கடந்த 26-ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு புதிதாக லக்னோ, அகமதாபாத் ஆகிய 2 அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதால், அதிகளவில் எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றன. லீக் போட்டிகள் அனைத்தும் மும்பை மற்றும் புனே நகரங்களில் உள்ள மைதானங்களில் நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், அதன்படி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை 22 லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. மேலும், இறுதி போட்டி நடைபெறும் இடம் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், 2022 ஐபிஎல் இறுதிப்போட்டி மே 29-ல் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய அம்சங்களுடனும், நவீன வசதிகளுடனும் உலகில் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக அகமதாபாத்தில் உள்ள மோடி மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.  இதனால் இந்தாண்டு இறுதிப்போட்டி அந்த மைதானத்தில் தான் நடைபெறும் என கூறப்படுகிறது. மேலும், ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகள் கொல்கத்தா மற்றும் லக்னோவில் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்