#IPL2021: ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்குகிறதா 14 ஆம் ஐபிஎல் தொடர்?

Default Image

ஐபிஎல் தொடர், இந்தியாவில் நடைபெறும் என்றும், அது வரும் ஏப்ரல் 11-ம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

உலகளவில் கொரோனா பரவலுக்கும் மத்தியில் ரசிகர்களின்றி, 2020 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள், அமீரகத்தில் நடைபெற்றது. இதுவரை நடந்த ஐபிஎல் வரலாற்றில் 2020 ஆம் நடந்த ஐபிஎல் போட்டிகள் போல எந்த போட்டியும் இருந்ததில்லை. தற்பொழுது 2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், அதற்கான பணிகளை ஐபிஎல் நிர்வாகம் தொடங்கியுள்ளது.

அந்தவகையில், ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 8 அணியும் தங்களின் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதனைதொடர்த்து இந்தியா – இங்கிலாந்து இடையிலான இரண்டாம் டெஸ்ட் போட்டி முடிவடைந்த பின் மினி ஏலம் தொடரும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும், கடந்த ஆண்டு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் நடைபெற்றது போல இந்தாண்டு அமீரகத்தில் நடைபெற வாய்ப்புகள் கம்மி என்று கூறப்படுகிறது.

இதனால் இந்தியாவிலே போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இந்தாண்டு ஐபிஎல் தொடர் வழக்கம் போல ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவுள்ளதாகவும், வரும் ஏப்ரல் 11-ம் தேதி முதல் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ளதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்