இன்று நடைபெற உள்ள போட்டியில் கொல்கத்தா VS மும்பை அணிகள் பலபரீச்சை நடத்துகிறது.
நடப்பு சாம்பியனான மும்பை அணி ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியிடம் தோல்வி அடைந்தது.
அதே அபுதாபி மைதானத்தில் மீண்டும் மும்பை களம் காணுவதால் இம்முறை ஆடுகளத்தை நன்கு புரிந்துகொண்டு ஆடுவதற்கு முயற்சி எடுக்கும். முதல் ஆட்டத்தில் சிறந்த தொடக்கம் கிடைத்தும் பின் வரிசை பேட்ஸ்மேன்களால் தடுமாறி விட்டனர். இருந்தபோதிலும் பந்து வீச்சு, பேட்டிங்க் இரண்டிலும் வலுவான அணியாகவே மும்பை அணி உள்ளது.இதனால் முதல் தோல்வியை துடைக்க இன்றைய போட்டியில் வெற்றி நோக்குடன் களமிரங்கும் மும்பை என்று தெரிகிறது.
இந்நிலையில் எதிர்புறம் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தலைமையில் கொல்கத்தா அணி தரப்பில் அதிரடி வீரர் மோர்கன் இருக்கிறார்.இவர் எந்த சூழ்நிலையிலும் ஆட்டத்தின் போக்கை மாற்றும் அசாத்திய திறன்படைத்த அதிரடி ஆட்டக்காரர்.அதே போல் ஆந்த்ரே ரஸ்செல், சுழலில் மிரட்டும் சுனில் நரின், குல்தீப் மேலும் ரூ.15½ கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ், பிரசித் கிருஷ்ணா என நட்சத்திர வீரர்கள் நிறைய பேர் அணியில் இருப்பதால் நம்பிக்கையோடு மும்பையின் சவாலை எதிர்கொள்வார்கள்.
மேற்படி இவர்களின் ஆட்டம் ஒன்றாக சேர்ந்தால் ஆனால் அபாயகரமான அணியாக உருவெடுக்கும் கொல்கத்தா என்பதில் சந்தேகமில்லை. இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் ரன்மழையை இன்று எதிர்பார்க்கலாம்.
சுப்மான் கில்லும், சுனில் நரினும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்குவார்கள் என்று நேற்று தெரிவித்தார் கேப்டன் தினேஷ் கார்த்திக், ‘சுப்மான் கில் தரம் வாய்ந்த வீரர். அவர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அணியின் எதிர்பார்ப்பையும் தாண்டி அவர் சிறப்பாக ஆடுவார் என்று நம்புகிறேன். பல்வேறு விதங்களில் பந்து வீசும் வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டிருப்பது எங்களது பலமாகும். இந்தியாவைச் சேர்ந்த 4 வேகப்பந்து வீச்சாளர்களும் (ஷிவம் மாவி, கம்லேஷ் நாகர்கோட்டி, சந்தீப் வாரியர், பிரசித் கிருஷ்ணா) நல்ல நிலையில் உள்ளனர். ஆடும் லெவனில் யாரை சேர்ப்பது என்பதை முடிவு செய்ய மிகவும் கடினமாக இருக்கப்போகிறது’ என்று கார்த்திக் தெரிவித்தார்.இந்நிலையில் இன்றைய போட்டி கிரிக்கெட் ரசிகர்களின் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…