ஆடுகளத்தில் அசத்தும் அசுர சுழல்…! சிக்கி சிதறும் அணிகள்

Published by
kavitha

கடந்த 2018-19 வருடத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக அஸ்வின் ஐபிஎல் போட்டியில் களமிரங்கியவர். இவருடைய கேப்டன்ஷிப்பில் 28 ஆட்டங்களில் பஞ்சாப் 12 வெற்றி, 16 தோல்வி கண்டது. 2018 புள்ளிகள் பட்டியலில் 7 இடத்திற்கும் அதே போல்2019 வருடம் 6வது இடத்தையும்மும் பிடித்தது.

2 வருடங்களிலுமே கடைசி ஆட்டத்தில் மோசமாக விளையாடியதால் பிளேஆஃப் சுற்றுக்கு அவ்அணியால் தகுதி பெற முடியாமல் வெளியேறியது.ஆனால் இந்தாண்டு புதிய அணி, புதிய பயிற்சியாளர்கள், புது கேப்டனுடன் களமிறங்க கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்கள் முடிவெடுக்கப்பட்டது. இதனால்  அஸ்வின் டெல்லி அணியால் வாங்கப்பட்டார்.2018ல் ஏலத்தில் அஸ்வினை ரூ. 7.60 கோடிக்குப் பஞ்சாப் அணி தேர்வு செய்தது . இந்நிலையில் இவ்வருடம் இதே தொகைக்கே அஸ்வினை தில்லி அணி பெற்றுக்கொண்டு தன் வசப்படுத்தியது.

இந்நிலையில் புதிய அணி அனுபவத்தோடு களமிரங்கி விளையாடும் வரும் அஸ்வின் தனது சுழலை சிறப்பாகச் சுழற்றி பந்துவீசி வருகிறார்.மேலும் புள்ளிகள் பட்டியலில் தில்லி அணி  முதலிடம் வகித்து வருகிறது.இதற்கு முக்கியக் காரணமாக அஸ்வின் இருந்து வருகிறார்.அஸ்வின் இதுவரை விளையாடியுள்ள 4 ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் எடுத்து உள்ளார். அவருடைய எகானமி 6.90 .

நடப்பாண்டு ஐபிஎல் போட்டியில் குறைந்தது 4 ஆட்டங்களில் விளையாடியுள்ள வீரர்களில் குறைந்த எகானமி உள்ள வீரர்களில் அஸ்வின் 4வது இடத்தில் உள்ளார்.

மேலும் ராஜஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 4 ஓவர்கள் வீசி 22 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.ஆட்ட நாயகன் விருது அவருக்குக் கிடைத்தது.

இந்நிலையில் பஞ்சாப் அணி விக்கெட் எடுக்கத்  தடுமாறி வரும் நிலையில் டெல்லிக்கு விடுவித்த அஸ்வின், தில்லி அணிக்காக சிறப்பாகப் பந்துவீசி  வருகிறார். இவ்வருடம் பஞ்சாப் அணி எடுத்த பல முடிவுகள் தவறுதலாகவே இருக்கின்றது என்று விமர்சனங்கள் இருந்து வருகிறது.மேலும் அந்த அணி அஸ்வினை விடுவித்தது பெரிய தவறு என்பதை இத்தருணத்தில் உணந்திருப்பார்கள்.

தில்லி அணி சிறப்பாக விளையாடி வருவதால் அதே உற்சாகத்துடன் தனது சுழல் வீச்சாளால் சிறப்பாகப் பந்துவீசி இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிக்க சந்தர்பங்கள்  உருவாக வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

 
Published by
kavitha

Recent Posts

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இலங்கை தேர்தல்! மும்முனை போட்டியில் வெல்லப்போவது யார்?

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இலங்கை தேர்தல்! மும்முனை போட்டியில் வெல்லப்போவது யார்?

இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…

7 mins ago

அனிருத்தை சிம்மாசனத்தில் உட்கார வைத்து அழகு பார்த்த சூப்பர் ஸ்டார்.!

சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…

29 mins ago

நெற்றியில் இருந்த ‘குங்குமம்’ எங்கே.? விஜய் முன்னெடுக்கும் அரசியல் நிலைப்பாடு..?

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…

1 hour ago

வேட்டையன் இசை வெளியீட்டு விழா.. ரஜினி சொன்ன “கழுதை – டோபி” கதை!

சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…

1 hour ago

அப்பா என் பாட்டு எப்படி இருக்கு.. மாரி செல்வராஜ்-க்கு டஃப் கொடுத்த அவரின் குட்டி வாண்டு.!

சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…

1 hour ago

“அவருக்கு துளிகூட பயம் இல்லை” ! ரிஷப் பண்ட்டை புகழ்ந்த ஆடம் கில்கிறிஸ்ட்!

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…

2 hours ago