இன்றைய 34-வது போட்டியில் டெல்லி Vs சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதி வருகிறது. இப்போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தது.
சென்னை அணியின் தொடக்க வீரர்களாக சாம் கரண், டு பிளெசிஸ் இருவரும் இறங்கினர். வந்த வேகத்தில் சாம் கரண் 2 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர், ஷேன் வாட்சன் களமிறங்க இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நிதானமாக விளையாடி வந்த ஷேன் வாட்சன் 36 ரன் எடுத்து வெளியேறினார்.
பின்னர், அம்பதி ராயுடு களமிறங்கினர். அதிரடியாக விளையாடி வந்த டு பிளெசிஸ் அரைசதம் அடித்து 58 ரன்கள் குவித்தார். இதைத் தொடர்ந்து, இறங்கிய தோனி 3 ரன்னில் வெளியேற, பின்னர், ரவீந்திர ஜடேஜா களம் கண்டார். அம்பதி ராயுடு , அம்பதி ராயுடு இருவரும் கூட்டணி அமைத்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
கடைசிவரை களத்தில் ரவீந்திர ஜடேஜா 33* , அம்பதி ராயுடு 45* ரன்கள் உடன் நின்றனர். இறுதியாக சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 179 ரன்கள் எடுத்தனர். டெல்லி அணி 180 ரன்கள் இலக்குடன் களமிறங்க உள்ளது.
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…