Mohit Sewag [FileImage]
மும்பைக்கு எதிரான வெற்றிக்கு கில் மட்டும் காரணமல்ல, 5 விக்கெட் எடுத்த மோஹித் ஷர்மாவும் காரணம் என சேவாக் ட்வீட்.
நேற்று குஜராத் நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற 2-வது குவாலிஃபயர் ஆட்டத்தில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் பைனலுக்கு செல்வதற்கு பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்று முதலில் மும்பை அணி பந்துவீச, அதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட குஜராத் அணியில் கில் அதிரடியாக விளையாடி சதமடித்தார்.
இதனால் குஜராத் அணி 20 ஓவர்களில் 233/3 ரன்கள் எடுத்தது. இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணி, குஜராத் அணி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 171 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முக்கியமாக மோஹித் ஷர்மா சிறப்பாக பந்துவீசி(5/10) மும்பை அணியின் வெற்றிக்கனவை தகர்த்தார் என்றே கூறலாம்.
இந்த போட்டிக்கு பிறகு வீரேந்திர சேவாக், 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்கள் வீழ்த்திய மோஹித் ஷர்மா வுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டரில், விடாமல் முயற்சித்து நெட் பவுலராக இருந்து மீண்டும் அணிக்குள் வந்த மோஹித் ஷர்மா சிறப்பாக செயல்பட்டார், இந்த சீசனில் 24 விக்கெட்கள் வீழ்த்தி அதிக விக்கெட்கள் எடுத்தவர்களிலும் முன்னிலையில் இருக்கிறார்.
மேலும் குஜராத் அணி இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான தகுதியான அணி என்றும், நேற்றைய போட்டியில் கில்லுக்கான தினமாக அமைந்தது என்றும் ட்வீட் செய்துள்ளார். இதன்மூலம் குஜராத் அணியின் வெற்றிக்கு மிகவும் முக்கிய காரணமாக கில் மட்டுமில்லை, மோஹித் ஷர்மாவும் காரணம் என மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…